Home » Archives by category » இந்தியா (Page 117)

உலகசந்தையில் உச்சத்தை தொட்ட கோதுமை!

Comments Off on உலகசந்தையில் உச்சத்தை தொட்ட கோதுமை!

இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது. இதனால் உலகச் சந்தையில் கோதுமை விலை மளமளவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவால் உலக சந்தையில் கோதுமை விலை உச்சத்திற்கு சென்று உள்ளது. இதனால் உலக நாடுகள் இந்தியா மீது தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பியாவில் கோதுமை டன் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்று வருவதாகவும் இது புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது. கோதுமை உற்பத்தியில் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து […]

Continue reading …

மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிர்மலா சீதாராமன்

Comments Off on மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 30ம் தேதியுடன் முடிவடைகிறது. நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 24ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 1ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படுகிறது. இந்த வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 3 ஆம் தேதிகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக சார்பில் […]

Continue reading …

இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணை வெளியீடு

Comments Off on இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணை வெளியீடு

தேர்தல் ஆணையம் மாநிலங்களவைக்கான எம்பி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மே 24-ம் தேதியிலிருந்து மே 31ம் தேதி வரை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 3ம் தேதி கடைசி தேதி என்றும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Continue reading …

கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி!

Comments Off on கடல் அலையில் சிக்கி வாலிபர் பலி!

கடலில் வீடியோ எடுத்த நபர் அலையில் சிக்கி பலியான சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மானிலம் விழிஞ்சம் என்ற பகுதியில் புளிங்குடி ஆழிமலை சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள கடல் பகுதிக்குச் சென்றும் பாறைகளில் ஏறி நின்று செல்பி எடுப்பது வழக்கம். நேற்று மாலை புனலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜோதிஷ் (25). தனது நண்பர்கள் மற்றும் யாத்திரைக் குழுவுடன் ஆழிமலை கோவிலுக்குச் சென்றார். அவர் தன் நண்பர்களுடன் […]

Continue reading …

உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியான சம்பவம்!

Comments Off on உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியான சம்பவம்!

13 வயது சிறுவன் கைக்குழந்தையை நீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்தேறியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தை மாயமாகியுள்ளது. இந்த நிகழ்வு உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அலிகஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர் கேசவ் ராகுல். இவருக்கு ஒரு வயதில் ரீத்து என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைதான் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பள்ளியின் நீர் தொட்டியில் […]

Continue reading …

மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை உத்தரவு!

Comments Off on மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை உத்தரவு!

மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியை தடை செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோதுமை விலை ஏறிக்கொண்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோதுமை ஏற்றுமதி தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பிற […]

Continue reading …

டெல்லி தீ விபத்தில் 30 பேர் பலி!

Comments Off on டெல்லி தீ விபத்தில் 30 பேர் பலி!

டெல்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரையிலும் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]

Continue reading …

நோ ஒர்க் ப்ரம் ஹோம், 800 பேர் ராஜினாமா!

Comments Off on நோ ஒர்க் ப்ரம் ஹோம், 800 பேர் ராஜினாமா!

மும்பையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் வசதியை நிறுத்தியதால் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கொரொனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் திடீரென அலுவலகத்திற்கு வர சொன்னதால் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரும் ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒயிட் ஹேட். இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒர்க் ப்ரம் […]

Continue reading …

தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!

Comments Off on தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!
தங்க நிறத்திலான தேர் ஆந்திர மாநில கடலில் மிதப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்த புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில கடலில் […]

Continue reading …

ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

Comments Off on ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

ரூ.3கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை ஆந்திராவில் வெட்டியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சித்தூரில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ. 3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை தமிழகத்தை சேர்ந்த 7 பேர் வெட்டியதாக ஆந்திரா காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 வாகனங்களையும் ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Continue reading …