Home » Archives by category » இந்தியா (Page 121)

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.6 சதவீத இடஒதுக்கீடு செல்லும்

Comments Off on அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.6 சதவீத இடஒதுக்கீடு செல்லும்

சென்னை உயர்நீதிமன்றம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.6 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சமூக – பொருளாதார நிலையை கருதி, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது. அதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் […]

Continue reading …

டில்லியில் திமுக அலுவலகம் திறப்பு

Comments Off on டில்லியில் திமுக அலுவலகம் திறப்பு

டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்த மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி அவர்களுக்காக காத்திருந்தார். சற்று நேரத்தில் வந்தடைந்த சோனியா காந்தியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அண்ணா சிலையை திறந்து வைத்தார் […]

Continue reading …

ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Comments Off on ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஜியோமி நிறுவனம் இந்தியாவில் விரைவில் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி 12 ப்ரோ சிறப்பம்சங்கள்: * 6.73–inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, * 1500 nits பிரைட்னஸ், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 120 Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் * Snapdragon 8 Gen 1 SoC, 12TH LPDDR5 ரேம், * Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி […]

Continue reading …

காப்பி அடிக்காம தேர்வு எழுதணும்! பிரதமர் அறிவுரை!

Comments Off on காப்பி அடிக்காம தேர்வு எழுதணும்! பிரதமர் அறிவுரை!

நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வு தொடங்கும் சூழலில் பிரதமர் மோடி மாணவர்களிடம் தேர்வு குறித்து நம்பிக்கையூட்டும் விதமாக பேசியுள்ளார். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தேர்வு குறித்த பயமும் மாணவர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்கும் விதமாக பரீக்‌ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது பேசிய பிரதமர் “மாணவ, மாணவிகள் […]

Continue reading …

பான் கார்டையும் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்!

Comments Off on பான் கார்டையும் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்!

சென்னை, மார்ச் 31- பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என வருமானவரித்துறை கூறியுள்ளது. இதற்கான கால அவகாசத்தை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து வருமானவரித்துறை நீட்டித்து வந்தது. இந்த இணைப்புக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்றைக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத கணக்குகளின் பான் எண் செயலிழந்துவிடும் என்றும், இதற்கு பின் பான் எண்ணை புதுப்பிக்கவும், ஆதார் எண்ணை இணைக்கவும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அறிவிப்பு […]

Continue reading …

நீட் தேர்வு தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம் – வேல்முருகன் !

Comments Off on நீட் தேர்வு தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம் – வேல்முருகன் !

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அத்தேர்வை ரத்து செய்யக்கோரி இதுவரை சமரசமற்ற போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சனநாயக வழிமுறைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கருத்தமர்வுகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வந்ததோடு, தோழமை அமைப்புகள் முன்னெடுத்த நிகழ்வுகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முக்கிய பங்காற்றி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02.05.2016 -ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு ஒன்றில்,  அரசமைப்புச் […]

Continue reading …

2 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு !

Comments Off on 2 கோடி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு !

தடுப்பூசி செலுத்தப்படும் வேகத்தை அனைவரும் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியாவின் சுட்டுரையை மேற்கோள்காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது: ‘‘மிகச் சிறப்பு! நன்றாக செயல்பட்டுள்ளீர்கள்.. என் இளம் நண்பர்களே. இந்த வேகத்தை நாம் தொடர்வோம். கொவிட்-19 தொடர்பான நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரையும் […]

Continue reading …

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் பேச்சு!

Comments Off on கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் குறித்து கேரள முதல்வரிடம் பிரதமர் பேச்சு!

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனிடம், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கும் பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இது குறித்து பிரதமர்  வெளியிட்ட தொடர் சுட்டுரையில் கூறியிருப்பதாவது : கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் ஆலோசித்தேன். காயம் அடைந்தவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் களத்தில் உள்ள அதிகாரிகள் உதவி வருகின்றனர். அனைவரின் […]

Continue reading …

பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது : எச்சரிக்கும் எம்.பி ஜோதிமணி!

Comments Off on பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது : எச்சரிக்கும் எம்.பி ஜோதிமணி!

சீமான் ஒரு பாஜக அடிவருடி என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும் கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணி எம்.பி கடுமையாக சாடியுள்ளார். சீமான் குறித்து ஜோதிமணி ட்விட்டரில் பதிவிட்டதாவது :   சீமான் ஒரு பாஜக அடிவருடி, பாஜக வெறுப்பு புரையோடிக்கிடக்கும், கல்வி,வேலைவாய்பு, தொழில், சமூகநீதியை முன்னிறுத்தும் தமிழகத்தில், தன்னால் நேரடியாக களமிறங்கி மத, கலவர அரசியலை செய்ய முடியவில்லை என்பதால் பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது. எச்சரிக்கை தேவை என தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் சீமான் […]

Continue reading …

ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!

Comments Off on ஐபிஎல் கோப்பையை வாங்கியவுடனே இளம் வீரரிடம் கொடுத்த அழகு பார்த்த டோனி!

கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் கோப்பையை வாங்கிய டோனி, இளம் வீரர் தீபக் சஹாரிடம் கொடுத்து அழகு பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு, கோப்பை அணியின் கேப்டன் […]

Continue reading …