
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பதவியேற்கும் போது 21 முறை ‘ஓம் ஸ்ரீராம்‘ என எழுதினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்றார். கூட்டணி ஆட்சி என்பதால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி கிஞ்சராபு […]
Continue reading …
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம், மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று 2வது முறையாக மத்திய கல்வி அமைச்சராக தனது அலுவலகத்தில் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுக் கொண்டார். பின் செய்தியாளர்களிடம், “நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் இந்திய அரசும், தேசிய ஜனநாயக கூட்டணியும் உறுதி பூண்டுள்ளது, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு […]
Continue reading …
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு சிறுமி பாலியல் வழக்கில் ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தம்மிடம் உதவி கேட்டு வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். […]
Continue reading …
புல்டோசர் கொண்டு சுங்கச்சாவடியையே டிரைவர் இடித்து தள்ளியுள்ளார். உத்தர பிரதேசத்தில் முந்தைய காலங்களில் ஏதேனும் பரபரப்பான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை தண்டிக்கும் விதமாக அவர்களது வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. அதுபோல தற்போது ஒரு சுங்கச்சாவடியையே ஒரு நபர் புல்டோசர் கொண்டு இடித்துள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூர் பகுதியில் சிஜார்சி சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. அந்த டோல்கேட் வழியாக புல்டோசர் ஒன்று சென்றுள்ளது. அதற்கு சுங்க கட்டணம் கட்டும்படி சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதற்கு அந்த புல்டோசர் டிரைவர் […]
Continue reading …
நாடு முழுவதிலும் சமீபத்தில் பல வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பலரும் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவிலேயே நாடு முழுவதும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் அதிநவீனமான தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல வழித்தடங்களில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களின் வழித்தடங்களில் பயணிக்கும் இந்த வந்தே பாரத் ரயிலில் ஏசியில்லா அமரும் இருக்கை, ஏசியுடன் கூடிய அமரும் இருக்கை வசதிகள் உள்ளது. சாதாரண […]
Continue reading …
ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் பதவி காலம் முடிவடைந்தது. தேர்தலை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்து பதவி ஏற்பு விழாவும் முடிவடைந்து விட்டதை அடுத்து பாஜக தேசிய தலைவர் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமானவர் என்று கூறப்படும் வினோத் தாவ்டே பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பெயர் பரிசீலனையில் உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் துணை […]
Continue reading …
நேற்று நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது மூன்று பிரிவுகளும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. இன்று அவர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சலப் பிரதேசம் மண்டி என்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்த பெண் காவலர் ஒரு […]
Continue reading …
நாளை டில்லியில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள உள்ளார். இதனால் அம்மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமாகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7.15மணியளவில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு […]
Continue reading …
அமலாக்கத் துறை டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி […]
Continue reading …
சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் 579 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி வைத்திருக்கும் சில நிறுவனங்களில் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான போது அவர் வைத்திருந்த பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் கூட புவனேஸ்வரி நிறுவனத்தின் […]
Continue reading …