
இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும், கேரளாவில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம் மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாமல் ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவும் உள்ளார். அவர் மட்டக்களப்பில் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடிய போது, “அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளை அடிக்கப்படுகிறது, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் வரும் அக்டோபர் 17ம் தேதி அதிபர் தேர்தல் […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த மார்ச் 21ம் தேதி டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு செல்லும் வகையில் ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 1ம் தேதியுடன் இடைக்கால […]
Continue reading …
கரையை கடந்தது ‘ரிமால்’ வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கும் இடையே கரையை கடந்தது ‘ரிமால்’ புயல்; வங்கதேசத்தின் மோங்லாவில் நேற்று நள்ளிரவு 10:30 மணி முதல் 12:30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது; மோங்லாவிலிருந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக ‘ரிமால்’ புயல் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
Continue reading …
இன்று காலை 7 மணி முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திடீரென முன்னாள் முதலமைச்சர் மெகபூபா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்று 6வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் இன்று தான் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நீண்ட அரசியல் […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உங்கள் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இன்று 6 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், “வாக்குப்பதிவின் முதல் ஐந்து கட்டங்களில், நீங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் பிரச்சாரங்களை நிராகரித்து, உங்கள் வாழ்க்கை தொடர்பான அடிமட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்கள். இன்று ஆறாவது […]
Continue reading …
கேரளாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் கூகுள் மேப் காட்டும் வழியில் சென்றதால் காருடன் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநருக்கு வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி உள்ளார். கோட்டயம் வந்த போது கார் ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது உள்ளே இருந்தவர்கள் நீரில் தத்தளித்த […]
Continue reading …
கடவுளின் குழந்தை என்று தன்னை பிரதமர் மோடி சமீபத்தில் கூறிக் கொண்டார். அவரது கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கேலி செய்து வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘கலவரத்தை தூண்டி விடவும் விளம்பரங்கள் மூலம் பொய்களை பரப்புவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்துவதற்காக கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பாரா? மக்களின் வங்கி கணக்கில் ரூபாய் 15 […]
Continue reading …
17 வயது சிறுவன் புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தை ஏற்படுத்தி இரண்டு நபர்கள் பலியாகினர். அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் உள்ளார். தற்போது அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் என்பவர் தனது கார் ஓட்டுநர் கங்காராம் என்பவரை மிரட்டி கார் விபத்தை தான் […]
Continue reading …
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால் டெல்லியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் பேசிய ஸ்வாதி மாலிவால், “இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய நாள். அனைவருக்கும், குறிப்பாக பெண்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவில், அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.” எனத் தெரிவித்துள்ளார்.
Continue reading …