
வைகுண்ட ஏகாதசி திருப்பதியில் மார்கழி மாதத்தில் தொடங்குவதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் தயாராகி வருகின்றன. மார்கழி மாதத்தில் ஏகாதசியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் மிக பிரசித்தம். முக்கியமாக திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் செல்வது வாடிக்கை. இவ்வாண்டு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 22ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட ரூ300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் சுமார் […]
Continue reading …
இரண்டு யூடியூபர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. நேற்று விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் படகு ஒன்று தீ பிடித்தது. இந்த தீ மற்ற படகுகளுக்கும் வேகமாக பரவியதுடன் படகுகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்ததால் பெரும் தீ விபத்தாக இது மாறியது. உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ […]
Continue reading …
இந்திய இளைஞர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மாரடைப்பு உட்பட ஒரு சில காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர். குறிப்பாக ஜிம்மில் அதிக அளவு ஒர்க் அவுட் செய்பவர்கள் மாரடைப்பால் இறந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு செய்து கொடுத்துள்ள விளக்கத்தில், “இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல. கொரோனா சிகிச்சை, குடும்பங்களில் உள்ள நோய், வாழ்க்கை முறை மாற்றங்களால் இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். கடந்த […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் தோன்றிய ‘மிதிலி’ புயல் வங்கதேசத்தில் கரையை கடந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது. இது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறியதை அடுத்து இந்த புயலுக்கு ‘மிதிலி’ என்று பெயர் வைக்கப்பட்டது. ‘மிதிலி’ புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது போலவே வங்கக் கடலில் […]
Continue reading …
சாத் பூஜையை முன்னிட்டு வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கியமான பூஜை சாத் பூஜை. இந்த பூஜைக்காக வடமாநிலத்தவர் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி உள்ளனர். ஆனால் இதுவரையிலும் இல்லாத அளவில் ரயில்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. சவீதா விரைவு ரயிலில் அடிப்படைக் கட்டணம் ரூ.2950 என்றாலும், டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக ரூ6555 வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இக்கட்டண உயர்வினால் புலம்பெயர் தொழிலார்கள், பயணிகள் தங்கள் […]
Continue reading …
மசூதியிலிருந்து மர்ம நபர்கள் பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல் வீசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் நூவில் பகுதியில் சில பெண்கள் பூஜைக்கு சென்று கொண்டிருந்தபோது மசூதியிலிருந்து மர்ம நபர்கள் சிலர் கற்களை பேசியதாக கூறப்படுகிறது. இதில் சில பெண்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் படையுடன் சென்ற எஸ்பி, பொதுமக்களை சமாதானப்படுத்தியதாகவும் மசூதி […]
Continue reading …
அடுத்த மாதம் 30ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு 24மணி நேரம் இலவச மின்சாரம், விவசாயிகளின் ரூ.2 லட்சம் […]
Continue reading …
புதிதாக ஏஐ தொழில் நுட்பம் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிதாக்குவதோடு, வேலைபளுவையும் குறைக்கிறது. பல புதிய விஷயங்களுக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரின் குரலில் பேசுவது. பாடுவது, டீப் பேக் வீடியோ, மார்பிங் புகைப்படம் என்று பல விஷங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. பிரதமர் மோடி கர்பா நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ பெரும் […]
Continue reading …
இன்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸில் இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் […]
Continue reading …
தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுனருக்கு உத்தரவிடக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. மசோதாக்களை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி […]
Continue reading …