Home » Archives by category » இந்தியா (Page 47)

காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

Comments Off on காங்கிரஸில் இணைந்த பிரபல நடிகை!

இன்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸில் இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் […]

Continue reading …

மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

Comments Off on மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்!

தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுனருக்கு உத்தரவிடக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. மசோதாக்களை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி […]

Continue reading …

சர்க்கரை நோயாளிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Comments Off on சர்க்கரை நோயாளிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

மருத்துவ நிபுணர்கள் விரைவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியை தொடலாம் என எச்சரிக்கிறார்கள். கடந்த காலங்களை விட இந்தியாவில் சமீபமாக அதிகமானோர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சிறுவர்கள், இளைஞர்களுக்கு கூட சர்க்கரை நோய் தென்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஒரு புள்ளிவிவரத்தின்படி உலக அளவில் 7 பேருக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டால் அதில் ஒருவர் இந்தியராக உள்ளாராம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சர்க்கரை நோயினால் விரைவில் இந்தியாவில் 20 கோடி பேர் […]

Continue reading …

திகார் சிறைக்கு விசாரணைக்குழு அமைப்பு!

Comments Off on திகார் சிறைக்கு விசாரணைக்குழு அமைப்பு!

டில்லியில் உள்ள திகார் சிறை கைதிகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள திகார் சிறையில் அறை எண் 7ல் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும் அதுமட்டுமின்றி அவர்களுக்கு கூடுதலாக சில வசதிகள் வழங்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. சிறைத்துறை இயக்குனர் சஞ்சய் பணிவால் இதுகுறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைத்துள்ளதாகவும் விசாரணை […]

Continue reading …

நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 128 பேர் உயிரிழப்பு

Comments Off on நேபாளத்தில் நிலநடுக்கத்தால் 128 பேர் உயிரிழப்பு

இன்று 3வது முறை நேபாளத்தில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. நமது அண்டை மாநிலமான நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் எதிரொலியாக டில்லி, பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. […]

Continue reading …

பாஜக பிரபலத்தின் கருத்து!

Comments Off on பாஜக பிரபலத்தின் கருத்து!

பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி ரஞ்சனா நாச்சியார் செய்தது தவறுதான்.. ஆனால் அது தார்மீக கோபத்தினால், மாணவர்களுக்கு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்ற அக்கறையினால் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஞ்சனா நாச்சியார் என்பவர் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பேருந்தின் கூரையிலும் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை பதட்டத்தோடு கடிந்து கொண்டதோடு விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உணர்ச்சி வசப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவை சமூக அக்கறையுடன் […]

Continue reading …

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிரடி உத்தரவு!

Comments Off on காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிரடி உத்தரவு!

கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்கு 2600 கன அடி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று டில்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு உடனடியாக 2600 கன அடி நீரை நவம்பர் 23ம் தேதி வரை திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக […]

Continue reading …

தாஜ்மஹாலை கட்டியது யார்..? ஆய்விற்கு உத்தரவு!

Comments Off on தாஜ்மஹாலை கட்டியது யார்..? ஆய்விற்கு உத்தரவு!

டில்லி உயர்நீதிமன்றம் தாஜ்மஹாலை கட்டியது யார் என ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி உயர்நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை கண்டறிய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது. முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மகால் கட்டப்பட்டது அல்ல என்றும் ராஜா மான்சிங் என்பவர் தான் தாஜ்மஹாலை கட்டினார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனுவில் தாஜ்மஹாலின் வயது குறித்தும், ராஜா மான் சிங்கின் அரண்மனையின் கட்டப்பட்ட ஆண்டு மற்றும் அது […]

Continue reading …

அன்னதானம் வழங்கிய நீடா அம்பானி!

Comments Off on அன்னதானம் வழங்கிய நீடா அம்பானி!

3000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீட்டா அம்பானியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீடா அம்பானி அன்னதானம் வழங்கினார். முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவரது மனைவி மற்றும் தொழிலதிபர் நீடா அம்பானி நேற்று தன் 60வது பிறந்தநாள் கொண்டாடினார். இதே நாளில் இந்தியாவில் மிகப்பெரிய மாலான ஜியோ வேர்ல்ட் பிளாசா திறக்கப்பட்டது. இதன் துவக்க விழாவில், அம்பானி குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். […]

Continue reading …

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

Comments Off on பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

பாஜகவிலிருந்து பிரபல நடிகையான விஜயசாந்தி விலகி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை விஜயசாந்தி “தலைவாசல்” படத்தில் அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தும், அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தும் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். இவர் 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009ம் ஆண்டு மெதக் தொகுதியில் போட்டியியிட்டு எம்பியானார். […]

Continue reading …