
கடந்த 23ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாட, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இக்கூட்டத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சந்திரயான் – 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில், பெண் விஞ்ஞானிகள் பெருமளவில் பங்காற்றியதற்கு பாராட்டு தெரிவித்த அமைச்சரவை […]
Continue reading …
வரும் செப்டம்பர் 19 முதல் ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி அதிவேக இண்டர்நெட் பிராண்ட்பேன்ட் சேவை ஆரம்பம் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, “கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். மேலும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்திற்கான அறிமுக பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து […]
Continue reading …
கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாற்றாக 100% எத்தனாலில் இயங்கும் கார் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இன்று முதல் மத்திய அமைச்சர் இந்த காரை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பெட்ரோல் டீசல் இல்லாமல் 100% எத்தனாலில் இயங்கும் டொயோட்டா இன்னோவா காரை அறிமுகப்படுத்தவுள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக புகையை […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோதாக்கள் நிறைவேறிய பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இனி எந்த வழக்கும் நீடிக்காது என்றும் இதன் மூலம் 70% வழக்குகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன்-டையு, தாத்ரா-நகர் ஹவேலி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியபோது, […]
Continue reading …
திருப்பதி மலைப்பாதை வழியில் ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் பிடிபட்டுள்ளது. தற்போது நான்காவது சிறுத்தையும் பிடிபட்டுள்ளதால் நடைபாதையாக செல்லும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சிறுத்தைகள் நடமாட்டம் திருப்பதியில் நடைப்பாதையில் அதிகமாக இருப்பதாக பக்தர்கள் கூறிய நிலையில் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்று கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருப்பதி மலைப் பாதையில் நடமாடும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளை அமைத்தனர். இந்த கூண்டில் ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் சிக்கிய நிலையில் இன்று […]
Continue reading …
வெற்றிகரமாக இந்தியாவின் சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கியுள்ளது. அடுத்த கட்டமாக நிலவில் மனிதர்களை குடியேற்றும் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. சந்திராயன் 3 வெற்றி குறித்து பல அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். -திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் நெகட்டிவ் ஆக சில கருத்துக்களை தெரிவித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா இது குறித்து கூறும் போது “நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பிரதமர் மோடி […]
Continue reading …
சந்திரயான் 3 விண்கலன் நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருவதை பெருமைப்படுத்தும் விதமாக “சந்திரயான்- 3”க்கு கூகுள் “டூடுல்’’ வெளியிட்டுள்ளது. சந்திரயான்- 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பியது.விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாகத் நிலவில் தரையிறங்கியது. இதற்கு உலக நாடுகள் இந்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன. ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த சரித்திர நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்து […]
Continue reading …
இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கி சாதனை படைத்துள்ளது. சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா, சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்கு நீர் உள்ளதாக கண்டறிந்தது. இதையடுத்து, சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக […]
Continue reading …
அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. 2வது சுற்றும் தற்போது டிராவில் முடிந்துள்ளது. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் […]
Continue reading …
சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இன்று மாலை 5.44 மணி முதல் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது குறித்த நேரலை ஒளிபரப்பு தொடங்கியது. அதேபோல், சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறையில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்பட்டு, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிச் சாதனை படைத்தது. இதற்கு பிரதமர் மோடி, “இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது’’ […]
Continue reading …