Home » Archives by category » இந்தியா (Page 50)

ஆந்திரா இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு!

Comments Off on ஆந்திரா இந்துத்துவா அமைப்பு அறிவிப்பு!

உத்தர பிரதேச மாநில சாமியார் உதயநிதி தலையை சீவி வந்தால் 10 கோடி என அறிவித்திருந்தார். தற்போது உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் என ஆந்திர மாநில இந்துத்துவ அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதால், கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் பரிசு தரப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உதயநிதி […]

Continue reading …

உதயநிதிக்கு மம்தா அறிவுரை!

Comments Off on உதயநிதிக்கு மம்தா அறிவுரை!

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மனம் புண்படுத்தும் படி பேசக்கூடாது என்றும் அமைச்சர் உதயநிதிக்கு அறிவுரை கூறியுள்ளார். மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “உதயநிதி ஒரு ஜூனியர், அவர் எந்த அடிப்படையில் இக்கருத்தை கூறினார் என்று எனக்கு தெரியவில்லை, தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கை உள்ளது […]

Continue reading …

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை!

Comments Off on உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை ஒழிப்பது குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் திராவிடர் கழகம் முன்னெடுத்த ‘சனாதான ஒழிப்பு மாநாட்டில்’ கலந்து கொண்டார். அதில் அவர் சனாதானத்தை ஒழிப்பது குறித்து பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உதயநிதி தான் பேசியவற்றை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பரமஹம்ச […]

Continue reading …

திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

Comments Off on திருப்பதி தேவஸ்தானத்தின் அறிவிப்பு!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்று எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என கைப்பட எழுதி அனுப்ப வேண்டும், அவ்வாறு எழுதி கொண்டு வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று திருப்பதி தேவஸ்தானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,01,116ம் முறை கோவிந்தா கோவிந்தா என்று எழுதி வந்தால் ஒருவருக்கு மட்டும் […]

Continue reading …

பெண் விஞ்ஞானிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

Comments Off on பெண் விஞ்ஞானிக்கு கனிமொழி எம்பி வாழ்த்து

தென்காசியைச் சேர்ந்த திருமிகு. நிகர் ஷாஜி #AdityaL1 விண்கல திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார் சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, “சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இன நன்மைக்கும், இந்த பிரபஞ்சத்தை சரியாக புரிந்து கொள்வதற்கான […]

Continue reading …

கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு!

Comments Off on கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்று கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடைகளிலும் ஏராளமான கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் விற்பனை செய்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வந்த இளைஞர்கள் தற்போது மிக அதிகளவில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்களை […]

Continue reading …

நாசாவின் அதிர்ச்சி தகவல்!

Comments Off on நாசாவின் அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் ரஷ்யா நிலவை ஆய்வு செய்வதற்காக லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானது. நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய விண்கலம் நொறுங்கி விழுந்ததால், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 10 மீட்டர் விட்டதிற்கு பள்ளம் ஒன்று இருப்பதை நாசாவின் எஸ்ஆர்ஓ ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது. இந்த பள்ளம் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தால் தான் ஏற்பட்டிருக்கலாம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது. இந்த பள்ளத்தால் நிலவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா […]

Continue reading …

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Comments Off on போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்ரமிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பெண்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி அசாம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள கவுகாத்தியில் சில்சகோ ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்றும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. இப்பகுதியில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் […]

Continue reading …

அடுத்த விண்கல திட்ட இயக்குனர் பெண் விஞ்ஞானியா?

Comments Off on அடுத்த விண்கல திட்ட இயக்குனர் பெண் விஞ்ஞானியா?

தென்காசியை சேர்ந்த பெண் இயக்குனர் நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் இந்த செயற்கைக்கோளில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்றும் சூரியனின் வெப்பநிலை உள்பட பல்வேறு ஆய்வுகளை செய்யும் என்றும் […]

Continue reading …

‘ஆதித்யா எல் 1’ கவுண்டவுன் ஸ்டார்ட்

Comments Off on ‘ஆதித்யா எல் 1’ கவுண்டவுன் ஸ்டார்ட்

‘ஆதித்யா எல் 1’ விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் இஸ்ரோ நிறுவனத்தில் இன்று தொடங்கியது. இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல புதிய ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தன. சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ‘ஆதித்யா எல் […]

Continue reading …