
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பின் சார்பில் 15வது உச்சி மாநாடு ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில், நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக […]
Continue reading …
தற்போது உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக மேயர் சுஸ்மா கார்வெல், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை வருகை தந்தார். அங்குள்ள ஐசியு அறைக்குள் ஷூ அணிந்துகொண்டு நுழையும்போது, பணியாளர்கள் அவரை தடுத்ததாகவும், இதில், மேயர் மற்றும் பணியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், மருத்துவமனை வளாகத்திற்கு ஒரு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும், இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் மேயர் […]
Continue reading …
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கும் நிகழ்வை உலகமே பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் உசேன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகள் இஸ்ரோவின் இந்த முயற்சியை வியந்து பார்த்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் லேண்டரை தரையிறக்கியது இல்லை. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். சந்திராயன் […]
Continue reading …
கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக மாநிலத்தில் ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசும் போது, “கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமஜென்ம பூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இக்கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து எப்போது கோயில் திறக்கப்படும் என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில், கோயில் திறப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அயோத்தியில் கட்டப்படும் ராமர் […]
Continue reading …
ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்பில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தனது ரீசார்ஜ் பேக்குகளில் நெட்ப்ளிக்ஸை இலவசமாக வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனங்களில் ஒன்று. அவ்வபோது வாடிக்கையாளர்களை என்கேஜ் செய்யும் விதமாக ஜியோ நிறுவனம் பல்வேறு ஸ்பெஷல் பேக்குகளையும், சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது. தற்போது ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவசமாக நெட்ப்ளிக்ஸ் சேவையை வழங்குகிறது. அதன்படி ரூ.1099 மற்றும் ரூ.1,499 ஆகிய இரண்டு பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. […]
Continue reading …
வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டால் அதற்-கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கேரள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்திரவிட்டுள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் மோசடி செய்து பணம் எடுத்து வருவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. […]
Continue reading …
இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். அங்கு அவர் பைக்கில் பயணம் செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். லே என்ற பகுதியிலிருந்து பேங்காங் என்ற ஏரி பகுதிக்கு பைக்கில் சவாரி மேற்கொண்டார். பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. […]
Continue reading …
மாநில உள்துறை அமைச்சருக்கு மஹாராஷ்டிரம் மாநிலம் மும்பையைச் சேர்ந்த தனஞ்செய் என்பவர் தன் ஒரு விரலை வெட்டி அனுப்பியுள்ளார். முதலமைச்சர் ஏக்நத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி மஹாராஷ்டிரம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள மும்பை உல்ஹாஸ் நகரில் நந்தகுமார் தன் குடும்பத்துடன் முகாம் எண் 4. உள்ள அஷாலேபாடா பகுதியில் வசித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். நந்தகுமார் […]
Continue reading …
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2012ம் ஆண்டு வருமானதுறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், மோகன்லால் வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான யானை தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்ததற்காக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு […]
Continue reading …