
கேரள மாநிலம் செல்லும் தமிழக வாகனங்கள் தேனியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவிலுள்ள இடுக்கியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக வாகனங்கள் தேனி எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்திற்கு ஏற்றப்படும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் சபரிமலை கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன […]
Continue reading …
காசர்கோடு நீதிமன்றம் 9 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் உறவுக்கார சிறுமியை 9 ஆண்டுகளாக ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. குற்றவாளிக்கு தொகுத்து 97 வருட சிறை தண்டனையும் 8 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை […]
Continue reading …
கே.எஸ். அழகிரியே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு தனித்தனியே கோஷ்டியும் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியை டில்லி தலைமை நியமித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்று ஐந்து ஆண்டுள் ஆகியுள்ளது. அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், புதிய காங்கிரஸ் […]
Continue reading …
இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு இந்தியர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்தியாவைப் பல ஆண்டுகள் ஆட்சி செய்த கிறிஸ்துவ நாடான தற்போது ஒரு இந்தியர் பிரதமராக இருப்பது குறிப்பிடத்தக்கது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய சுதந்திர தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசும்போது, “என் மேஜையில் தங்க விநாயகர் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். என்னை பொருத்தவரை பிரதமராக இருப்பது மிகப்பெரிய கௌரவம் என்றாலும் அது எளிதான வேலை இல்லை. கடினமான முடிவுகளை எடுக்கவும் […]
Continue reading …
இதுவரை விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கி வந்த மத்திய பாதுகாப்பு அமைத்துறை அமைச்சகம் தற்போது மாயா இயங்குதளத்துக்கு மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சைபர் பாதுகாப்பு மற்றும் மால்வேர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதை அடுத்து விண்டோஸ் இயங்கு தளத்துக்கு மாற்றாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மாயா இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கணினிகளை பயன்படுத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாயா இயங்குதளத்தை பயன்படுத்த கடற்படை அனுமதி வழங்கி உள்ளதாகவும் ராணுவம் மற்றும் விமானப்படை இதன் […]
Continue reading …
கடந்த 24 மணி நேரத்தில் இமாசல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பல உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இமாசல பிரேதேசம் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரியில் பலியானவர்களில் 14 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலரது உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது. தற்போது பத்ரிநாத், […]
Continue reading …
சென்னைக்கு ஆந்திராவிலிருந்து வந்த இரண்டு விரைவு ரயில்களில் அடுத்தடுத்து பயணிகளிடம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் வந்த இரண்டு ரயில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா பகுதியில் திடீரென கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் நகைகளை பறித்து சென்றதாக தெரிகிறது. பயணிகள் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி […]
Continue reading …
கவர்னர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், “ஒரு பெற்றோராக நீட் தேர்வு தடை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்” என்று ஒருவர் கேள்வி எழுப்பியபோது “நீட் தேர்வுக்கு ஒருபோதும் நான் தடை கொடுக்க மாட்டேன். நமது குழந்தைகளை கஷ்டத்திற்கு ஆழ்த்த நான் விரும்பவில்லை. நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று படிக்க […]
Continue reading …
மணிப்பூரில் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றியிருந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் […]
Continue reading …
நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதால் அவருக்கு பிரம்மாண்டான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார். உதகையில் […]
Continue reading …