Home » Archives by category » இந்தியா (Page 55)

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம்!

Comments Off on பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்திட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிததத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் தேவை, குறுவை நெற்பயிரையும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் காப்பாற்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட காவிரி நீர் பற்றாக்குறையை தீர்க்க கர்நாடகா அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும், 80% நிரம்பிய சூழலிலும் கர்நாடகாவின் முக்கிய அணைகளிலிலிருந்து […]

Continue reading …

மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல் காந்தி!

Comments Off on மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார் ராகுல் காந்தி!

ராகுல் காந்தியின் அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்திற்கு ராகுல் காந்தி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி மீது மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதனால் அவரது எம்பி பதவி பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் […]

Continue reading …

மெஸ்சிகோ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு!

Comments Off on மெஸ்சிகோ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழப்பு!

இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்து மெக்சிகோவில் நடந்துள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலையில், மேற்கு மெக்சிகோவில் 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று, அமெரிக்க நாட்டின் எல்லையிலுள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டிருந்தது. இதில், இந்தியர்கள், டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர். இப்பேருந்து, மாநில தலைநகரான டெபிக்கிற்கு நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே […]

Continue reading …

பியூட்டி பார்லர் மீது இளம்பெண் புகார்!

Comments Off on பியூட்டி பார்லர் மீது இளம்பெண் புகார்!

பியூட்டி பார்லருக்கு சென்ற பெண் அங்கு முடிவெட்டிக் கொள்வதற்காக எண்ணெய் தடவியதும், கையுடன் தலைமுடி கொத்தாக வந்ததில் அதிர்ச்சியடைந்ததால் போலீசில் புகாரளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகர், ஓல்ட் சிட்டியைச் சேர்ந்த பெண் தன் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக அருகில் உள்ள அபிட்ச் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்குச் சென்றிருந்தார். பார்லரில் இருந்த அழகுக்கலை நிபுணர் அப்பெண்ணுக்கு தலைமுடியில் ஒருவித எண்ணெய்யை தடவி, அதன்பின்னர், முடியை வெட்டியதாகவும், பின், தலைமுடி கொத்தாக கொட்டி, கொஞ்ச நேரத்திலேயே உச்சந்தலையில் […]

Continue reading …

ஞானவாபி மசூதியில் அகழாய்வுக்கு நீதிமன்றம் அனுமதி!

Comments Off on ஞானவாபி மசூதியில் அகழாய்வுக்கு நீதிமன்றம் அனுமதி!

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்த மசூதி இந்து கோவிலை இடித்துக்காட்டியது என இந்துக்கள் கூறி வருகின்றனர். இது குறித்து தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி ஏற்கனவே சிவலிங்கம் கோயில் ஆக இருந்ததாகவும் அவுரங்கசீப் காலத்தில் தான் அதை இடித்து ஞான வாபி மசூதியாக கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வழக்கில் ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு […]

Continue reading …

கர்நாடக பாஜகவில் அதிரடி மாற்றம்!

Comments Off on கர்நாடக பாஜகவில் அதிரடி மாற்றம்!

முக்கிய பொறுப்பில் இருந்த பாஜக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சி.டி.ரவி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் தேசிய துணைத் தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய், உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராதா மோகன் அகர்வால் ஆகிய இருவரும் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்னர். […]

Continue reading …

அமைச்சர் உதயநிதி அமித்ஷாவுக்கு எழுப்பிய கேள்வி

Comments Off on அமைச்சர் உதயநிதி அமித்ஷாவுக்கு எழுப்பிய கேள்வி

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் திமுக வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அமைச்சர் அமித்ஷா, “வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட அண்ணாமலை நடைபயணம் […]

Continue reading …

“லியோ” படத்திற்கு கேரளா தியேட்டர்களின் எண்ணிக்கை?

Comments Off on “லியோ” படத்திற்கு கேரளா தியேட்டர்களின் எண்ணிக்கை?

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். இப்போது “லியோ” படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. படம் கேரளாவில் […]

Continue reading …

நடுக்கடலில் கப்பலில் தீ!

Comments Off on நடுக்கடலில் கப்பலில் தீ!

சரக்கு கப்பல் ஒன்று டச்சு கடல் பகுதியில் தீப்பற்றியுள்ள நிலையில் அதில் பணியாற்றிய 20 இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்த பெரும் பதட்டம் எழுந்துள்ளது. 3000 சொகுசு கார்களை ஜெர்மனியிலிருந்து ஏற்றிக் கொண்டு வந்த பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எகிப்து நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது. இக்கப்பல் டச்சு கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியுள்ளது. கப்பலில் சுமார் 20க்கும் மேல் இந்தியர்கள் பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. இத்தீ விபத்தில் ஒரு இந்திய […]

Continue reading …

நாடாளுமன்ற கூட்டத்தில் சதி; அமைச்சர் அமித்ஷா!

Comments Off on நாடாளுமன்ற கூட்டத்தில் சதி; அமைச்சர் அமித்ஷா!

மத்திய அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதியிருக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறும்போது, “ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூலை 19ம் தேதி மணிப்பூர் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து நாட்களாக அமளி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்திற்கு முதல் நாள் இந்த வீடியோ வெளியாக வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் […]

Continue reading …