
அலகாபாத் நீதிமன்றம் போக்சோ சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. போக்சோ மற்றும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் பெண்கள் பொய் புகார்கள் பதிவு செய்கின்றனர் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டில் பெண் ஒருவர் தொடர்ந்த பொய்யான பாலியல் வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மாநில அரசிடமிருந்து நிவாரணம் பெறவும் அப்பாவியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் ஆயுதமாக […]
Continue reading …
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமத்திற்கு காரணம் தமிழக அரசு தான் என்று தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமதத்திற்கு தமிழக அரசுதான் காரணம். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதம் ஆகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக் கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை. தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி […]
Continue reading …
ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகள் அவருடைய மகள் நடித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றியவர் வஜாஹத் உல்லா கான். கடந்த ஜனவரி மாதம் காலமானார். அவருக்கு முன்பே அவருடைய மனைவி சபியா பேகம் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவருடைய மகள் பர்வேஸ் என்பவர் 10 ஆண்டுகளாக அவருடைய மனைவி என்று கூறி ஓய்வூதியம் பெற்று வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் கொடுத்து […]
Continue reading …
இன்று பாராளுமன்றத்தில் “மோடி என்ன பரமாத்மாவா அல்லது கடவுளா? வரட்டும் பார்க்கலாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இன்று பிரதமர் மோடி பதிலளித்தார். பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சியினர்களை கிழிக்க போகிறார் என பாஜக எம்பிகள் குரல் […]
Continue reading …
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருகும் நெற்பயிருக்கு தண்ணீர் கேட்டு பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை நடத்தியது. நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்தின் போது பயிர் காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் காவேரி டெல்டா பகுதியில் கருகும் நெற்பயிர்களை பாதுகாக்க காவிரிகள் விரைவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி நிர்வாக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்த திமுகவிற்கு இரண்டு கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் டில்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்த கட்சிகளில் ஒன்று திமுக. டில்லி அவசர சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களித்த திமுகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார், முதலமைச்சர் […]
Continue reading …
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் விரும்பினால் தான் சிறை செல்லவும் தயார் என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசினார். அதில், “நாடு முழுவதும் நான் மேற்கொண்ட பயணம் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்னும் நிறைவேறவில்லை, நடை பயணத்தின் போது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய நடைப்பயணம் மக்கள் மீது அன்பு செலுத்தவே நடந்தது. நான் பாராளுமன்றத்தில் மோடி அதானி உறவு குறித்து […]
Continue reading …
பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிரவாதம் அல்லது வன்முறை செய்பவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டு வருவதுபோல் தமிழ்நாட்டிலும் புல்டோசர் ஆட்சி வரும் என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, விருதுநகர் பாஜக அலுவலகத்திற்கு போலீசார் வந்து பாரதமாதா அன்னை சிலையை திருடி சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் புல்டோசர் ஆட்சி வராது என்று நினைக்காதீர்கள் கண்டிப்பாக புல்டோசர் ஆட்சி வரும். எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு திமுக பிரமுகர்கள் தக்க பதிலடி கொடுப்பார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்திட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிததத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் தேவை, குறுவை நெற்பயிரையும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் காப்பாற்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட காவிரி நீர் பற்றாக்குறையை தீர்க்க கர்நாடகா அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும், 80% நிரம்பிய சூழலிலும் கர்நாடகாவின் முக்கிய அணைகளிலிலிருந்து […]
Continue reading …
ராகுல் காந்தியின் அவதூறு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்திற்கு ராகுல் காந்தி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தி மீது மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதனால் அவரது எம்பி பதவி பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் […]
Continue reading …