Home » Archives by category » இந்தியா (Page 57)

இரவில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்!

Comments Off on இரவில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்!

இளம் பெண் ஒருவர் தனது கிராமத்தில் தினமும் இரவில் மின்சாரத்தை துண்டித்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் இரவில் சந்திப்பதற்கு திட்டமிட்ட நிலையில் தினமும் கிராமத்தின் மின் இணைப்பை துண்டித்து விட்டு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த காதலரை சந்தித்துள்ளதாக தெரிகிறது. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதை கிராமத்தினர் கிராமத்தை சுற்றி வந்த போது இளம் பெண்ணும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து […]

Continue reading …

கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

Comments Off on கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. அதனால் இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவிலும் சில நாட்களாக கன மழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை […]

Continue reading …

கேள்விக்கு பதிலளிக்க தயார்; உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Comments Off on கேள்விக்கு பதிலளிக்க தயார்; உள்துறை அமைச்சர் அமித்ஷா!

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இன்று மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த தயார் என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென்றும் பிரதமர் அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பிரதமர் ஏற்காததை அடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளி செய்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என உள்துறை […]

Continue reading …

பிரதமர் மோடி தமிழில் டுவீட்!

Comments Off on பிரதமர் மோடி தமிழில் டுவீட்!

பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவிற்கு வந்துள்ளதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எமது கடின உழைப்பாளிகளான மீனவர்களின் விவகாரம் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை செயலாற்றுமென நான் உறுதியாக நம்புகின்றேன். இந்திய – இலங்கை நட்புறவின் 75 ஆண்டுகளையும், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையையும் […]

Continue reading …

கர்நாடக துணை முதலமைச்சரின் உறுதி!

Comments Off on கர்நாடக துணை முதலமைச்சரின் உறுதி!

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழகத்திற்கு தண்ணீரை கண்டிப்பாக திறந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் ஜூன் மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக மாநிலம் இன்னும் தரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து டில்லி சென்று அவர் மத்திய அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடக மாநிலத்திற்கு குடிநீர் தேவைக்கான நீரை வைத்துக்கொண்டு மீதமுள்ள தண்ணீரை கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் […]

Continue reading …

கர்நாடகா முன்னாள் முதலமைச்சரின் அறிவிப்பு!

Comments Off on கர்நாடகா முன்னாள் முதலமைச்சரின் அறிவிப்பு!

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். பெங்களூரில் சமீபத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்கு குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் டில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் நடந்தபோதும் அதிலும் குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு கூட்டணிகளும் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை குமாரசாமி அதிருப்தியுடன் தெரிவித்திருந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி பாஜகவுடன் இணைந்து […]

Continue reading …

மூட்டை மூட்டையாக தக்காளி குப்பையிலா?

Comments Off on மூட்டை மூட்டையாக தக்காளி குப்பையிலா?

தெலுங்கான மாநிலத்தில் மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பைத் தொட்டியில் விவசாயிகள் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தக்காளியை ஒரு சில விவசாயிகள் பதுக்கி வைத்திருந்ததாகவும் ஆனால் கவனிக்காமல் விடப்பட்டதை அடுத்து அந்த தக்காளிகள் அனைத்தும் அழுகி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேறு வழியின்றி மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பை தொட்டியிலும் கால்நடைகளுக்கு உணவாகவும் போட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அழுகிய […]

Continue reading …

துபாயிலிருந்து சூட்கேசில் வந்த தக்காளி!

Comments Off on துபாயிலிருந்து சூட்கேசில் வந்த தக்காளி!

தக்காளியின் வலை வெகுமளவிற்கு உயர்ந்துள்ள காரணத்தினால் சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. துபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்த இளம்பெண் ஒருவர் 10 கிலோ தக்காளியை கொண்டு வந்ததுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி 200 ரூபாய் அளவில் வட இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இளம்பெண் ஒருவர் தனது அம்மா வீட்டிற்கு துபாயிலிருந்து இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். அப்போது அவர்கள் தனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டபோது […]

Continue reading …

மாதம் ரூ.2,000: தொடங்கி வைத்தார் முதல்வர்!

Comments Off on மாதம் ரூ.2,000: தொடங்கி வைத்தார் முதல்வர்!

கர்நாடக மாநிலத்தில் மாதம் 2000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிவந்த போது அக்கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் கடந்து சில நாட்களாக நடந்து வந்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து விரைவில் அம்மாநிலத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் […]

Continue reading …

மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்!

Comments Off on மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்!

இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சபாநாயகர் அதை ஏற்கவில்லை. உடனே நாடாளுமன்ற எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல் நாளே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தான் நாடாளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நாளையும் இதே பிரச்சனையை […]

Continue reading …