
காதலிக்கு திருமணம் ஆனபிறகும் தொல்லை கொடுத்ததால் தெலுங்கானா மாநிலத்தில் லாரி ஓட்டுனர் பட்டப்பகலில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சிரியாவாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தில் வசித்து வரும் கனகய்யாவின் மனைவி பத்மா. இத்தம்பதியர்க்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகளும் அதேபகுதியைச் சேர்ந்த மகேஷ் என்றவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்தபோது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்தாண்டு அப்பெணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. […]
Continue reading …
ஐஏஎஸ் படிக்க விரும்பிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் பணம் இல்லை என்ற காரணத்தினால் சமோசா விற்று அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஐஏஎஸ் படித்து வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நாக்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சூரஜ் இளங்கலை படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் உள்ளார். இதையடுத்து அவர் ஐஏஎஸ் படிக்க முடிவு செய்து அதற்காக தீவிர முயற்சி செய்து வருகிறார். ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை அடைவதற்காக […]
Continue reading …
பிறந்த ஒரு குழந்தைக்கு 24 விரல்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாத் மாவட்டடத்தில் வசிக்கும் ராவளிக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களுடம் பிறந்துள்ளதாகவும் அக்குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் குழந்தையின் பெற்றோர் சாகர் மற்றும் ரவளி மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் […]
Continue reading …
ரயில்வே துறை பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, சேலம் வழித்தடத்தில் இயங்கி கொண்டிருக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடியலிருந்து சேலம், தர்மபுரி வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விட்டது. கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டதை அடுத்து ரயில்வே பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு ஓசூர், தர்மபுரி சேலம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் […]
Continue reading …
மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக வேட்பாளர் கர்நாடக மாநிலத்திலுள்ள புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி நிறுத்திய புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்த […]
Continue reading …
குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, அவருடைய எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குஜராத் […]
Continue reading …
ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக தகவலறிந்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ள சம்பவம் ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ளது. தற்போது ஐபிஎல்-2023- 16வது சீசன் நடைபெறுகிறது. இதில், 10 அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டிகளைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில், நடைபெறும் போட்டியில், சன்ரைஸ் ஐதராபாத் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டு வருகிறது. அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பதாக […]
Continue reading …
சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக 1 ரூபாய் நாணயங்களைச் சேகரித்து டெபாசிட் பணத்தை கட்டியுள்ளார். வரும் மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளுங்கட்சியாக பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். யாதகீர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை […]
Continue reading …
தற்போது ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் பயனர்களிடமிருந்து சந்தா கட்டணத்தை வசூலிக்க ஜியோ சினிமா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலவசமாக தற்போது ஐபிஎல் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா தந்து கொண்டுள்ளது. விரைவில் சந்தா வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ […]
Continue reading …
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் 7633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 61233 என உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் […]
Continue reading …