Home » Archives by category » இந்தியா (Page 71)

சந்தா வசூலிக்க ஜியோ திட்டமா?

Comments Off on சந்தா வசூலிக்க ஜியோ திட்டமா?

தற்போது ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் பயனர்களிடமிருந்து சந்தா கட்டணத்தை வசூலிக்க ஜியோ சினிமா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலவசமாக தற்போது ஐபிஎல் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா தந்து கொண்டுள்ளது. விரைவில் சந்தா வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ […]

Continue reading …

படிப்படியாக குறையும் கொரோனா!

Comments Off on படிப்படியாக குறையும் கொரோனா!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் 7633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 61233 என உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் […]

Continue reading …

அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலை குறித்து காங்கிரஸ் பிரமுகர் குற்றச்சாட்டு!

அண்ணாமலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணமூட்டையை ஹெலிகாப்டரில் எடுத்துச் சென்றதாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியிருக்கிறார். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது சொத்து பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றம் சாட்டினார். அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கர்நாடக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க ஹெலிகாப்டரில் பணம் மூட்டைகளை அண்ணாமலை கொண்டு வந்தார் என காங்கிரஸ் […]

Continue reading …

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!

Comments Off on பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜா ரெட்டி விபத்தில் உயிரிழப்பு!

கார் விபத்து ஒன்றில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ நீரஜா ரெட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள கர்னூலின் ஆலூர் பாஜக பொறுப்பாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவான பாட்டீல் நீரஜா ரெட்டி, ஐதராபாத் நகரிலிருந்து கர்னூலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்து ஓட்டடுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நீரஜா ரெட்டி (52 வயது) […]

Continue reading …

பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்!

Comments Off on பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்!

முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. முக்கிய பிரமுகர் கட்சியை விட்டு விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் நடப்பு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தனக்கு […]

Continue reading …

மதுபான கொள்கை முறைகேடு; அரவிந்த் கெஜ்ரிவால் கைதா?

Comments Off on மதுபான கொள்கை முறைகேடு; அரவிந்த் கெஜ்ரிவால் கைதா?

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், இன்று அவர் ஆஜராகவுள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள […]

Continue reading …

இறந்தவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு!

Comments Off on இறந்தவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் தற்போது மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் பகுதியில் கொரோனா தொற்றால் கமலேஷ் 2021ம் ஆண்டு கமலேஷ் இறந்து விட்டதாக கூறி கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அவரது உடலை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைக்கவில்லை. மேலும் மருத்துவமனை ஊழியர்களை அவரது உடலை இறுதி சடங்கு செய்து விட்டதாக கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கமலேஷ் உயிருடன் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த […]

Continue reading …

காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியா?

Comments Off on காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியா?

இன்று டில்லியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரயிருப்பதையொட்டி, பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் […]

Continue reading …

ராகுல் காந்தி பேட்டி!

Comments Off on ராகுல் காந்தி பேட்டி!

முதலமைச்சர் நிதிஸ்குமாரை சந்தித்த பிறகு ராகுல் காந்தி “நாட்டிற்காக ஒற்றுமையாக போராடுவோம்” என்று பேட்டியளித்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றிருந்தார். அவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட […]

Continue reading …

இந்திய முஸ்லிம்கள் பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து!

Comments Off on இந்திய முஸ்லிம்கள் பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாகிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவருடன் உரையாடினார். அப்போது அவர், “உலகின் இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வில் எந்தவித கஷ்டமும் இல்லை. இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தான் தன்னை அறிவித்துக் கொண்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட […]

Continue reading …