Home » Archives by category » இந்தியா (Page 84)

தண்டவாளத்தை காணோமா…..?!

Comments Off on தண்டவாளத்தை காணோமா…..?!

இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகாரில் உள்ள பந்தோல் ரயில் நிலையத்திலிருந்து லோகத் வரையிலான தண்டவாளங்கள் திருடு போயிருப்பதாக தெரியவந்துள்ளது. திருடு போன ரயில் தண்டவாளங்களின் இரும்புகளின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பீகாரில் கடந்த 19ம் தேதி அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் மொபைல் கோபுரம் ஒன்றையும் திருடி சென்றுள்ளதாகவும் தெரிகிறது. இந்த மொபைல் கோபுரம் திருடு […]

Continue reading …

மத்திய அரசை விமர்சித்த தெலுங்கானா முதலமைச்சர்!

Comments Off on மத்திய அரசை விமர்சித்த தெலுங்கானா முதலமைச்சர்!

தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய அரசை “மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கானாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் நடந்த பேரணியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் ஜோக் இன் இந்தியா திட்டம்தான். காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது, பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது மொத்தத்தில் இந்தியாவை […]

Continue reading …

கொலை குற்றத்திற்காக 16 வயது சிறுவன் கைது

Comments Off on கொலை குற்றத்திற்காக 16 வயது சிறுவன் கைது

மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டம் கைலாசபுரி கிராமத்தில் 58 வயது பெண் ஒருவர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். இதில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுவன் (16) பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்கச் சென்றுள்ளான். அப்போது, அந்த வீட்டின் இருந்த பெண்ணின் செல்போனை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டான். இதனால், இரு குடும்பத்தினரும் இடையே சண்டை ஏற்பட்டது. […]

Continue reading …

ரயில்வேயின் அதிரடி உத்தரவு..!

Comments Off on ரயில்வேயின் அதிரடி உத்தரவு..!

தெற்கு ரயில்வே போது மேலாளர் ஆர்என் சிங் ஒரு ரயில்வே ஊழியர் எந்த மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாரோ அந்த மாநிலத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக ரயில் டிக்கெட் கவுண்டரில் இருப்பவர்களுக்கு மாநில மொழி தெரியாததால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பெரும் பிரச்சனை வருகிறது. எனவே பயணிகளோடு தொடர்புடைய ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இனிமேல் […]

Continue reading …

முதலமைச்சரை அவதூறாக பேசிய போலீஸ் கைது!

Comments Off on முதலமைச்சரை அவதூறாக பேசிய போலீஸ் கைது!

போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை என்.டி.ஆர் மாவட்டத்தில் கவுராவரம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் கிராமவாசி ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் தென்னேரு வெங்கடேஷ்வரலு என்பவர் அவதுறாக பேசியுள்ளார். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியிருந்துள்ளார். அதை வீடியோ எடுத்த நபர் அதுகுறித்து சிலாகல்லு போலீஸ் […]

Continue reading …

மும்பைக்கு குண்டு மிரட்டல்!

Comments Off on மும்பைக்கு குண்டு மிரட்டல்!

தாலிபான் பெயரில் என்.ஐ.ஏவுக்கு மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக இமெயில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராட்ஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஷிவசேனா உட்கட்சி எதிர்ப்பு அணி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநில தலைநகர் மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக தாலிபான்கள் பெயரில் ஒரு இமெயில் என்.ஐ.ஏவுக்கு வந்துள்ளது. இந்த இமெயில் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …

டில்லியில் பாஜகவினர் போராட்டம்!

Comments Off on டில்லியில் பாஜகவினர் போராட்டம்!

பாஜகவினர் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் அரசு நிதிபெற்று இயங்கி வரும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக டில்லியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்புவது குறித்து […]

Continue reading …

மோடியின் பயண செலவு பற்றி அமைச்சர் தகவல்!

Comments Off on மோடியின் பயண செலவு பற்றி அமைச்சர் தகவல்!

மத்திய இணையமைச்சர் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயண செலவு ரூ.22.76 கோடி என்று தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை 21 முறை பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமர் மோடி வெளி நாடு பயணம் செய்தது பற்றியும் அதற்காக செலவு பற்றியும் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி 21 வெளி நாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். […]

Continue reading …

மும்பை போலீசின் அதிரடி பதில்!

Comments Off on மும்பை போலீசின் அதிரடி பதில்!

மும்பை போலீஸ்க்கு நிலாவுல மாட்டிக்கிட்டேன் காப்பாத்துங்க சார் என்று உதவி கேட்ட நபரால் பரபரப்பு! சீரியஸான பதிவுகள் கூட சமூக வலைதளங்களின் வாயிலாக காமெடியாக முடிந்து விடுகிறது. அரசு துறைகள் முதற்கொண்டு அனைத்து புகார் மற்றும் நடவடிக்கைகளும் சமூக வலைதளங்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சாலையில் மழைநீர் தேங்குகிறதா? புகைப்படத்துடன் ஒரு டுவிட் போதும். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சரிசெய்யப்பட்ட புகைப்படத்துடன் பதில் வருகிறது. இப்போதெல்லாம் மழை பெய்தால் பள்ளி விடுமுறை உண்டா? இல்லையா? என நேரடியாக […]

Continue reading …

சிவில் சட்டம் குறித்து மத்திய அமைச்சரின் கருத்து!

Comments Off on சிவில் சட்டம் குறித்து மத்திய அமைச்சரின் கருத்து!

மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். தற்போதிருக்கும் சிவில் சட்டத்தை மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்ற ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியபோது பொது “சிவில் சட்டம் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன்பே அதன் பதவி காலம் முடிந்து விட்டது. பொது […]

Continue reading …