Home » Archives by category » இந்தியா (Page 93)

தியேட்டர்களில் அழுகை அறையா?

Comments Off on தியேட்டர்களில் அழுகை அறையா?

கேரளா அரசு தியேட்டரில் அழுகை அறை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கைக்குழந்தையுடன் தியேட்டருக்கு வரும் பெற்றோர்கள் திடீரென குழந்தை அழுதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். இவர்களுடைய நலன் கருதி கண்ணாடியால் மூடப்பட்ட அறை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த அறையில் குழந்தை அழுதாலும் மற்றவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காதாம். குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்காதவாறு அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய பொருள்களும் இந்த அறையில் கிடைக்கும். அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

Comments Off on கோவிட்-19 குறித்து அமெரிக்க ஆய்வாளர் பகீர் தகவல்!

வூஹான் மாகாண ஆய்வுகூடத்தில் பணியாற்றிய நபர் தன் புத்தகத்தில் கோவிட் -19 எனும் கொரொனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்ற தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு சீன தேசத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் கொரோனா தொற்றுப் பரவியது. இதனால், உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணகான மக்கள் உயிரிழந்தனர். கொரொனாவின் உருமாறிய வைரஸ் மேலும் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதன் 5ம் அலை விரைவில் பரவலாம் என […]

Continue reading …

பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

Comments Off on பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உலக நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி பிரதமர் மோடி மீது உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜி20 உலக நாடுகளின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இவ்வாண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக ஜி20 மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அரசு இப்போதிருந்தே தயாராகி வருகிறது. ஜி20 மாநாட்டை […]

Continue reading …

சிறுமியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

Comments Off on சிறுமியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!

18 வயது சிறுமியை ஒரு தலைக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அசம் நகரில் அயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்த ரயிலிலிருந்து 18 வயது சிறுமி இறங்கியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற 22 வயது இளைஞர் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே, அந்த இளைஞர் அவரை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், அவரும் தன்னைத் தானே கத்தியால் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். […]

Continue reading …

6 பேர் அமரும் வாகனத்தை கண்டுபிடித்த இளைஞர்!

Comments Off on 6 பேர் அமரும் வாகனத்தை கண்டுபிடித்த இளைஞர்!

ஆறு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ள இளைஞரை பிரபல கார் நிறுவன தலைவர் பாராட்டியுள்ளார். முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் தலைவர் ஆனத் மகிந்திரா. புதுமை விரும்பி மற்றும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களை கண்டறிந்து பாராட்டும் பண்புடையவர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன் டுவிட்டர் பக்கத்தில், 6 பேர் அமரும் வகையில், ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கிய இளைஞரின் கண்டுப்பிடிப்பு மற்றும் திறமையை பாராட்டியுள்ளார். மேலும், இது […]

Continue reading …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தகவல்!

Comments Off on நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தகவல்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிஎஸ்டி வரை முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒன்பது மாதங்களாக இந்தியாவில் ஜிஎஸ்டி வசூல் 1.40 லட்சம் கோடிக்கு மேல் வசூல் ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.1,45,867 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் தகவல். இந்தவசூல் தொகை கடந்த ஆண்டு நவம்பரை விட 11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 9 […]

Continue reading …

வாட்ஸ் அப்பின் அதிர்ச்சியான தகவல்!

Comments Off on வாட்ஸ் அப்பின் அதிர்ச்சியான தகவல்!

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு சமூக வலைதளங்கள் ஒவ்வொரு மாதமும் முறைகேடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் குறித்த அறிக்கையை அளித்து வருகின்றன. அவ்வகையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் இருபத்தி மூன்று லட்சத்து இருபத்தி நான்காயிரம் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலான கணக்கூகள் விதிமுறைகளை மீறி செயல் பட்டதன் காரணமாகவும், ஒரு சில கணக்குகள் […]

Continue reading …

கணவன் மனைவிக்கு இன்சூரன்ஸ் போட்டு கொலை!

Comments Off on கணவன் மனைவிக்கு இன்சூரன்ஸ் போட்டு கொலை!

கணவர் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவியை கூலிப்படை மூலம் கொலை செய்த சம்பவம் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர் மகேஷ் சந்திராவின் மனைவி ஷாலு தேவி. இருவருக்கும் ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் ஷாலு தேவி தனது சகோதரர் ஒருவருடன் பைக்கில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று மோதியதில் பலியானார். இந்த வழக்கை விபத்து என போலீஸ் முடிக்க இருந்த நிலையில் ஷாலுவின் கணவர் மகேஷ் சந்திரா மீது சந்தேகம் […]

Continue reading …

பிரணாய் ராய் என்.டி.டி.வி.யிலிருந்து விலகல்!

Comments Off on பிரணாய் ராய் என்.டி.டி.வி.யிலிருந்து விலகல்!

பிரணாய் ராய் மற்றும் அவருடைய மனைவி திடீரென என்.டி.டி.வி. இயக்குனர் பதவியிலிருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பிரபல தொழிலதிபர் அதானி என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வாங்கினார். அதன் பிறகு நடந்த கூட்டத்தின் முடிவில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இயக்குனர் பதவியிலிருந்து விலக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது என்.டி.டி.வி.யின் மேலும் 26 சதவீத பங்குகளையும் அதானி குழுமம் வாங்க முன் வந்துள்ளதை அடுத்து பிரணாய் ராய் […]

Continue reading …

ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

Comments Off on ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

பி.டி.உஷா முதல் முதலாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 26ம் தேதி இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா தனது விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பி.டி.உஷாவை தவிர வேறு யாருமே இத்தேர்தலில் […]

Continue reading …