Home » Archives by category » இந்தியா (Page 92)

சபரிமலையில் அதிக கூட்டத்தால் கேரள அரசின் முடிவு!

Comments Off on சபரிமலையில் அதிக கூட்டத்தால் கேரள அரசின் முடிவு!

கேரள அரசு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகனதால் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, நேரத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 90,000 பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க கேரள அரசு முடிவு செய்தது. மேலும் தரிசன நேரமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

போலி ரெய்டால் பணத்தை இழந்த தொழிலதிபர்!

Comments Off on போலி ரெய்டால் பணத்தை இழந்த தொழிலதிபர்!

தொழிலதிபர் ஒருவர் போலி சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் பணத்தை இழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது. காவல்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல போலியாக நடித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் ஆங்காங்கே அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பொவானிப்பூரில் உள்ள ரூப்சந்த் முகர்ஜி லேன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் வாத்வா. இவர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் […]

Continue reading …

நிதிஸ்குமாரின் விளக்கம்!

Comments Off on நிதிஸ்குமாரின் விளக்கம்!

முதலமைச்சர் நிதிஸ்குமார் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகத் போட்டியிடுவது குறித்து அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஸ்குமாருக்கு 160 எம்.எல்.ஏக்கள் […]

Continue reading …

ஒருவர் மீது ஒருவராக போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு!

Comments Off on ஒருவர் மீது ஒருவராக போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு!

பாதுகாவலர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா மீது கடந்த மே மாதம் 29ம் தேதி ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவரது தந்தை பால்கவுர் சிங் மீதும் ரவுடிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவதாக தகவல் வெளியானது. எனவே பஞ்சாப் காவல்துறை பல்கவுர் சிங்கிற்கு நவ்ஜோத் சிங் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இரு துப்பாக்கி ஏந்திய காவலர்களை பாதுகாப்பிற்கு நியமித்தனர். நேற்று முன் […]

Continue reading …

கிரிக்கெட் பேட்டால் தாயை அடித்து கொன்ற சச்சின்!

Comments Off on கிரிக்கெட் பேட்டால் தாயை அடித்து கொன்ற சச்சின்!

மும்பையில் பிரபல நடிகை வீணா கபூரை அவருடைய மகனே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் வீணா கபூர். பாலிவுட் திரைப்படங்கள், நாடகங்கள் பலவற்றில் நடித்த 74 வயதான வீணா கபூர் மும்பையில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகன் மும்பையிலேயே வசிக்கிறார். வீணா கபூருக்கு சொந்தமாக ரூ.12 கோடி மதிப்பில் மும்பையில் அடுக்குமாடி […]

Continue reading …

கொல்லப்பட்டதாக சொன்ன காதலி உயிருடன் கண்டுபிடிப்பு!

Comments Off on கொல்லப்பட்டதாக சொன்ன காதலி உயிருடன் கண்டுபிடிப்பு!
கொல்லப்பட்டதாக சொன்ன காதலி உயிருடன் கண்டுபிடிப்பு!

காதலியை கொன்றதாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டதாக சொன்ன காதலியை உயிருடன் கண்டுபிடித்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஜான்சி கிராமத்தை சேர்ந்த சோனு சைனியும் அதே பகுதியை சேர்ந்த ஆரத்தியும் நீண்ட காலமாக காதலித்துள்ளனர். அப்போது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆரத்தி மாயமாகியுள்ளார். ஆரத்தியை சோனுதான் கல்யாணம் செய்து கொன்றுவிட்டதாக ஆரத்தியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் சோனு மற்றும் அவரது நண்பரை போலீசார் கொலை […]

Continue reading …

ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

Comments Off on ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!
ஆபாச படம் எடுத்த நடிகர் கைது!

நடிகர் அனிருத் என்பவர் மாடல் அழகியை மிரட்டி ஆபாச படம் எடுத்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சார்க்கோப் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான பெண் மாடல் ஒருவருக்கு, வெப் சீரியல் தயாரிப்பாளர் யாஸ்மின் கான் என்பவருடன் அறிமுகமானது. இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, ஒரு வீட்டில் ஷூட்டிங் நடத்தப்பட்டது, அப்போது, மாடல் அழகியின் ஆடைகளை களையும்படி கூறியுள்ளனர். இதற்கு மாடல் அழகி மறுத்துள்ளார். பின்னர் […]

Continue reading …

ரயிலிலிருந்து விழுந்து ப்ளாட்பார்மில் சிக்கிய மாணவி!

Comments Off on ரயிலிலிருந்து விழுந்து ப்ளாட்பார்மில் சிக்கிய மாணவி!

கல்லூரி மாணவி ஒருவர் பிளாட்பாரத்திற்கும், ரயிலுக்குமிடையே சிக்கிய சம்பவம் திருப்பதி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியை சேர்ந்த சசிகலா என்ற பெண் துவ்வாடாவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு ரயிலில் சென்று வரும் சசிகலா நேற்று குண்டூரிலிருந்து ராயகடா எக்ஸ்பிரஸில் பயணித்துள்ளார். துவ்வாடா ரயில் நிலையத்தில் அவர் இறங்கியபோது கால் தவறியதில் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்குமிடையே சிக்கியுள்ளார். உடனே ரயில் நிறுத்தப்பட்டதுடன் மாணவியை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சில […]

Continue reading …

தாயே பெற்ற குழந்தையை எரித்து கொன்ற கொடூரம்!

Comments Off on தாயே பெற்ற குழந்தையை எரித்து கொன்ற கொடூரம்!

2 பெண் குழந்தைகளை பெற்ற தாயே எரித்து கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதியின் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஜோதிக்கும் அவரது கணவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. மன உளைச்சலில் இருந்த ஜோதி, தன் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் ஒரு குழந்தை உடல் கருவி உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கும், […]

Continue reading …

குஜராத்தின் முதல்வராகிறார் பூபேந்திர படேல்!

Comments Off on குஜராத்தின் முதல்வராகிறார் பூபேந்திர படேல்!

பாஜக குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ம் தேதி பதவியேற்கிறார் என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலையில் […]

Continue reading …