Home » Archives by category » உலகம் (Page 30)

துருக்கி அதிபரின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on துருக்கி அதிபரின் அதிரடி அறிவிப்பு!

துருக்கி அதிபர் 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். துருக்கியில் அடுத்தடுத்து ஐந்து முறை பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து இந்த பூகம்பத்தால் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டிடத்தின் இடைபாடுகளில் சிக்கி சுமார் 5000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் மூன்று மாதத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்வதாக நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் […]

Continue reading …

சீனாவில் சாலை விபத்தில் 16 பேர் பலி!

Comments Off on சீனாவில் சாலை விபத்தில் 16 பேர் பலி!

சீனாவின் நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 16 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவிலுள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை, பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத வகையில், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது. இந்தக் கொடூர விபத்தில் 16 […]

Continue reading …

சிரியா தலைநகரிலும் நிலநடுக்கம்!

Comments Off on சிரியா தலைநகரிலும் நிலநடுக்கம்!

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது அதன் அண்டை நாடான சிரியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது அண்டை நாடான சிரியாவின் தலைநகரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 1300 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. இன்று மாலை துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. துருக்கியில் ஏற்பட்ட […]

Continue reading …

சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!

Comments Off on சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!

சீனாவை “நீங்க பலூன் விட்டு விளையாட எங்க அணுசக்தி ஏவுதளம்தான் கிடைச்சுதா?” என்று அமெரிக்கா கேள்வியெழுப்பி உள்ளது. சீனாவின் உளவு பலூன் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொண்டானா பகுதியில் ராணுவ பாதுகாப்புடன் கூடிய அணுசக்தி ஏவுதளம் ஒன்று அமைந்துள்ளது. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட ஏவுதளம் பகுதியில் வானில் பறக்கும் பலூன் ஒன்று தென்பட்டது. அதை சுட்டு வீழ்த்தலாம் என நினைத்த ராணுவம் அதனால் ஏவுதளம் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என […]

Continue reading …

பாட்ஷா பட பாணியில் மாபியா தலைவன்!

Comments Off on பாட்ஷா பட பாணியில் மாபியா தலைவன்!

பாட்ஷா திரைப்பட பாணியில் ஒரு பக்கம் சமையல்காரராகவும், மறுபக்கம் மாபியா கும்பலின் தலைவனாகவும் வாழ்ந்து வந்தவரை பிரான்சில் போலீசார் கைது செய்துள்ளனர். பாட்ஷா திரைப்படத்தில் மும்பையில் பாட்ஷாவாக வாழ்ந்த ரஜினிகாந்த் பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி சென்னையில் சாதாரண ஆட்டோக்காரனாக வாழ்வார். அதுபோன்ற உண்மை சம்பவம் ஒன்று பிரான்சில் நடந்துள்ளது. இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்ற பின்னணிகளில் செயல்படும் மாபியா கும்பல்கள் அதிகமாக உள்ளது. அப்படி பல குற்ற சம்பவங்களில் […]

Continue reading …

விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்!

Comments Off on விக்கிப்பீடியாவை முடக்கிய பாகிஸ்தான்!

பிரபல விக்கிப்பீடியா தளம் இஸ்லாமிய மதம் குறித்த கருத்துகளை நீக்காததால் அந்த தளத்தையே பாகிஸ்தான் முடக்கியுள்ளது. விக்கிப்பீடியா இணையத்தில் அதிகமான வரலாற்று சம்பவங்கள், நபர்கள், அறிவியல் விளக்கங்கள் என பல தலைப்புகளிலும் தகவல்களை வழங்கும் தளம். உலகம் முழுதும் பலரால் இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அதிலுள்ள தகவல்களை பார்வையாளர்களே எடிட் செய்யவும் முடியும். இந்நிலையில் சமீபத்தில் விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுள் குறித்து சர்ச்சை மற்றும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கருத்துகளை 48 மணி […]

Continue reading …

இளைஞர் தொடர்ந்த இழப்பீடு வழக்கால் பரபரப்பு!

Comments Off on இளைஞர் தொடர்ந்த இழப்பீடு வழக்கால் பரபரப்பு!

தன் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த பெண் மீது இளைஞர் ஒருவர் 24 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்துள்ள வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த கௌசிகன் என்பவர் நோரா என்ற இளம் பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு சந்தித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த நிலையில் ஒருவருக்கொருவர் தொழில் சார்ந்த உதவிகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கௌசிகன் தனது காதலை நோராவிடம் வெளிப்படுத்திய நிலையில் நோரா அந்த காதலை ஏற்க […]

Continue reading …

பாகிஸ்தானில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சி!

Comments Off on பாகிஸ்தானில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சி!
பாகிஸ்தானில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சி!

பாகிஸ்தானில் பொருளாதார பின்னடைவு காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை விட அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. அந்நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் மிகவும் பின்னுக்கு தள்ளப்படும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வந்திருக்கும் தகவலின் படி அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு அமெரிக்க […]

Continue reading …

மைக் டைசனிடம் ரூ.40.81 கோடி கேட்டு பெண் வழக்கு

Comments Off on மைக் டைசனிடம் ரூ.40.81 கோடி கேட்டு பெண் வழக்கு

பாலியல் வன் கொடுமை தொடர்பாக பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனுக்கு எதிராக பெண் ஒருவர் அளித்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன். இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை உலக சேம்பியனாக வலம் வந்தார். இவர் களத்தில் எதிர் வீரரின் காதைக் கடித்தது, மனைவியுடனான விவாகரத்து, உட்பட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, தொழில்முறை குத்துச்சண்டையில் பின்னடைவை சந்தித்தார். […]

Continue reading …

35000 விமான பயணிகள் அவதி!

Comments Off on 35000 விமான பயணிகள் அவதி!

திடீரென ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 35000 பயணிகள் அவதியுற்றனர். விமான நிலைய ஊழியர்கள் ஜெர்மனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வேலை நிறுத்தத்தை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறு சதவீதம் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் விமான […]

Continue reading …