Home » Archives by category » உலகம் (Page 35)

இந்தோனேசியாவில் பயங்கரம்!

Comments Off on இந்தோனேசியாவில் பயங்கரம்!

மீண்டும் இந்தோனேஷியாவில் உள்ள பெரிய எரிமலைகளில் ஒன்றான செமேரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது. அதிகமான எரிமலைகளை கொண்டுள்ள நாடு இந்தோனேஷியா. ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு சம்பவங்கள் இந்தோனேஷியாவில் பதிவாகின்றன. கடந்த ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எரிமலை வெடித்ததில் 51 பேர் பலியானார்கள். தற்போது இந்த எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. 12,060 அடி உயரம் கொண்ட இந்த […]

Continue reading …

பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

Comments Off on பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உலக நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி பிரதமர் மோடி மீது உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜி20 உலக நாடுகளின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இவ்வாண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக ஜி20 மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அரசு இப்போதிருந்தே தயாராகி வருகிறது. ஜி20 மாநாட்டை […]

Continue reading …

வேலையாளின் விநோதமான வழக்கு!

Comments Off on வேலையாளின் விநோதமான வழக்கு!

வேலை செய்பவர் ஒருவர் தனக்கு சம்பளம் தந்துவிட்டு வேலை ஏதும் தராத நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலை செய்யும் நிறுவனம் தனக்கு சம்பளம் குறைவாக தருவது, பணிநீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அயர்லாந்தில் ஒரு பணியாளர் நடத்தியுள்ள நூதன போராட்டம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டை சேர்ந்த டெர்மோட் மில்ஸ் என்பவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் இவருக்கு வருடத்திற்கு இந்திய மதிப்பில் […]

Continue reading …

எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்த திட்டமா?

Comments Off on எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்த திட்டமா?
எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்த திட்டமா?

விரைவில் மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் எலான் மஸ்க் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க் உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர், கார் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்துள்ளதைப் போன்று, மனிதர்களின் மூளையில் சிப்பை பொறுத்தி அதை கணிணியின் மூலம் இயங்க வைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மனித […]

Continue reading …

திரைப்பட விமர்சகருக்கு அனுபம் கெர் பதிலடி!

Comments Off on திரைப்பட விமர்சகருக்கு அனுபம் கெர் பதிலடி!

கோவா திரைப்பட விழா தேர்வு குழுவினர்களில் ஒருவரான நாடவ் என்பவர், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்” திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கூறியுள்ளார். இவர் கூறிய கருத்திற்குகடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் தூதர் நாடவ் பேச்சுக்கு தனது மன்னிப்பை கேட்டுள்ளார். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அதற்குண்டான பதிலில், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நாடவ் விமர்சனம் செய்தது வெட்கக் கேடானது. சித்திவிநாயகர் அவருக்கு அறிவை கொடுக்கட்டும். பொய்யின் உயரம் […]

Continue reading …

கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபலம் யார்?

Comments Off on கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபலம் யார்?

குத்துச்சண்டை வீரர் ஒருவர் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியை கார் ஏற்றி கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. தற்போது அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் தனது எட்டாவது கோலை மெஸ்ஸி பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வெற்றியை மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா அணியின் கொண்டாடி வரும் நிலையில் […]

Continue reading …

ரஷிய முன்னாள் அமைச்சர் கைது!

Comments Off on ரஷிய முன்னாள் அமைச்சர் கைது!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விமான நிலையத்தில் சேட்டிலைட் செல்போனை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆட்சி உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வருகிறது. இன்று ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விக்டர் சேமனோவ் (64) டேராடூன் விமான நிலையத்தில் சேட்டிலைட் போனை பயன்படுத்திய, புகைப்படங்கள் எடுத்தார். அப்போது, சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் இதைப் பார்த்து அவரிடம் சேட்டிலைட் போன் பயன்படுத்தியது குறித்து விசாரித்தனர். அதற்கு அவர், “சேட்டிலைட் போனை இங்கு பயன்படுத்தக் […]

Continue reading …

ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

Comments Off on ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

பி.டி.உஷா முதல் முதலாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 26ம் தேதி இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா தனது விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பி.டி.உஷாவை தவிர வேறு யாருமே இத்தேர்தலில் […]

Continue reading …

இறுதிச்சடங்கில் 14 பேர் பலி!

Comments Off on இறுதிச்சடங்கில் 14 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்காவில் இறுதிச் சடங்கின் போது நிலச்சரிவு போது 14 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில் வயதான ஒருவர் காலமானதையடுத்து அவரை மண்ணில் புதைக்க இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டு மண் சரிந்தது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பலரும் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக் குழுவினர் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டனர். தற்போது […]

Continue reading …

அண்டை நாட்டின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on அண்டை நாட்டின் அதிரடி அறிவிப்பு!

அண்டை நாடான இலங்கை போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. போதை பொருள் உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வருகிறது. போதைப்பொருளை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை ஐந்து கிராமிற்கு அதிகமாக போதை பொருள் வைத்திருந்தால் அல்லது விற்பனையில் ஈடுபட்டாலும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் […]

Continue reading …