
உலகம் முழுவதும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது அமெரிக்காவில் மக்கள் பனியில் சிக்கி தவித்து வருகின்றனர். வரலாறு காணாத கடும் பனிபொழிவால் அமெரிக்க மாகாணங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. பல மாகாணங்களில் விமான சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனிமூடி கிடப்பதால் வாகனங்கள் மூலமாகவும் பயணிக்க முடியாமல் மக்கள் சிக்கியுள்ளனர். சில பகுதிகளில் கடும் பனியால் […]
Continue reading …
உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நொய்டாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை குழந்தைகள் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அதோடு சிரப்களின் ஆய்வக சோதனைகளில் எத்திலீன் கிளைகோல் தயாரிப்பில் நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உள்ளூர் மருந்தாளுனர்களின் ஆலோசனையின் […]
Continue reading …
நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இந்தியர்கள் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கூட ஏற்படும் வாக்குவாதம் பெரும் சண்டையாக மாறிவிடுகிறது. அப்படியாக விமானத்தில் நடந்த ஒரு கை கலப்பு சண்டைதான் தற்போது வைரலாகியுள்ளது. இந்தியாவிலிருந்து ஹாங்காங் சென்ற ‘தாய் ஸ்மைல் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணித்துள்ளனர். அதில் சில இந்தியர்களும் பயணித்துள்ளனர். அவர்களில் சிலருக்கு இடையே இருக்கை தொடர்பாக ஏதோ வாக்குவாதம் எழுந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து […]
Continue reading …
ஜப்பான் அரசு சீனாவிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா சோதனை செய்யப்படுவார்கள் என்றும் கொரோனா அறிகுறி அல்லது […]
Continue reading …
ஆப்கானில் உள்ள பெண்களின் உயர்கல்வி மற்றும், என் ஜி ஓக்களில் பெண்கள் பணிபுரிய தடை விதித்துள்ள தாலிபான்களின் உத்தவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில். ஆப்கானிஸ்தானில் கடந்த 2020ம் ஆண்டில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டதால், ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர். பழமைவாதிகளாக தாலிபான்கள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர். அத்துடன் சிறுமிகள் 6ம் […]
Continue reading …
இன்று காலை முதல் நாடு முழுவதும் ஜியோ சர்வர்கள் முடங்கியதால் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சில ஆண்டுகளுக்கு முன் முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ நெட்வொர்க் இன்று உலகம் முழுதும் பிரபலமாகியுள்ளது. ஒரு சாதாரண மனிதன் முதல் பிஸினஸ்மேன் வரை எல்லோரும் இணையதளம் பயன்படுத்த ஜியோ வருகைதான் காரணம். இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஜியோ நெட்வோர்க் இன்று காலை முதல் தற்காலிகமாக செயலிழந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சண்டிகர், பெங்களுர், சென்னை உட்பட பல பகுதிகளில் […]
Continue reading …
டுவிட்டரில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 40 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடு போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் டுவிட்டர் பயனாளர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் பயனாளர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட பல பிரபலங்களின் பெயர் முகவரி தொலைபேசி எண் இ-மெயில் முகவரி உள்பட பல்வேறு தனிப்பட்ட […]
Continue reading …
அசாம் மாநிலத்தில் சிறுத்தை புலியின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள தியோக் பகுதியில் செனிஜானில் மழைக்காடு ஆய்வு மையம் செயல்படுகிறது. இப்பகுதியில் சுற்றித் திரிந்து வரும் ஒரு சிறுத்தைப் புலி, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சிறுத்தைப் புலி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் லால் மீனா செய்தியாளர்களிடம் கூறும்போது, “3 வனத்துறை உள்ளிட்ட 13 பேரை இச்சிறுத்தைப் புலி தாக்கியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை […]
Continue reading …
இங்கிலாந்து அரசு நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் […]
Continue reading …
போதை பொருள் விற்பனை செய்த கும்பலை பெரு நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் சென்று போலீஸ் கைது செய்துள்ளனர். போதை பொருள் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் போதை வஸ்துகள் உற்பத்தி, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அவ்வப்போது அந்நாட்டு போலீஸ் குற்றவாளிகள் சிலரை பிடித்தாலும் போதை பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க முடியவில்லை. போலீசின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப போதை பொருள் கும்பலும் அப்டேட்டாகி விடுகின்றன. அவர்களை பிடிக்க போலீசும் புதிய முறைகளை கையாள்வது வழக்கமாகியுள்ளது. […]
Continue reading …