
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விழுந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் யார் யார் பயணம் செய்தார்கள்? அவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாகவும், விபத்தின் பாதிப்பு குறித்த விவரங்களை இனிமேல்தான் ராணுவம் திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நொறுங்கி […]
Continue reading …
சீரம் நிறுவனம் 10 கோடி டோஸ் தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீரம் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டது என்று அறிவித்ததோடு, அதனால் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் தடுப்பூசி தயாரித்து வழங்கி வந்த நிறுவனம் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தான் பெரும்பாலானோர் பயன்படுத்தினர். இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு பணியை தற்போது நிறுத்திவிட்டதாகவும் 10 கோடியை […]
Continue reading …
இன்று சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்க நாட்டிலுள்ள ஓகியோ மாகாணத்தில் இயங்கி வரும் பிரபல கார் விற்பனை மையம் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மரியெட்டா என்ற நகரில் அமைந்துள்ள கார் விற்பனை மையத்தின் மீது விழுந்தது. இதில், அங்கிருந்த கார்கள் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில், விமானத்தில் பயணித்த விமானி உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Continue reading …
ரஷ்யா உக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகின்றனர். சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியிருந்தது. இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன. தரை இலக்குகளைத் தாக்குவதற்கு, தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதை ஆயுதப் பற்றாக்குறையின் அறிகுறியாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வதேச வியூக ஆய்வுகள் நிறுவனத்தின் ராணுவ நிபுணரான டக்ளஸ் பாரி “சமீபத்திய […]
Continue reading …
ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து ஜிம்பாப்வே அணி […]
Continue reading …
பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் உலக பசி குறியீட்டில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவலையளிப்பதாக டுவிட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். பாமக முன்னாள் தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “2022ம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியா, ஏழை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகியவற்றை விட பின்தங்கியிருப்பது கவலையளிக்கிறது! உலக பசி குறியீடு என்பது பசி, […]
Continue reading …
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தர்றோம்..! என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உட்பட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. […]
Continue reading …
அமெரிக்க அதிகாரிகள் டுவிட்டர் ஒப்பந்தத்திலிருந்து எலான் மஸ்க் விலகியதை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் எலான் மஸ்க் முடிவு செய்தார். ஆனால் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார். எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் […]
Continue reading …
செவிலியர் ஒருவர் இரக்கமின்றி 7 பச்சிளம் குழந்தைகளை சம்பவம் பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த லூசி லெட்பி என்ற பெண் அங்குள்ள செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை 2 மாதங்களுக்குள்ளாக அம்மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றுள்ளார். கடந்த 2018ல் ஒரு குழந்தையை கொல்ல முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். […]
Continue reading …
ஆங் சான் சூகியின் சிறை தண்டனை மேலும் 26 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது. 77 வயது ஆங் சான் சூகி மியான்மரின் நடந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகள் போராட்டம் நடத்தியதற்காக தற்போது சிறையில் உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆன் சாங் சூகி […]
Continue reading …