
சீன அரசு நிறுவனங்கள் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து சீன அரசுக்கு சொந்தமான ஒரு சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் தற்போது வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக் ஆகிய நிறுவனங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசின் […]
Continue reading …
சுமார் 1 லட்சம் டன் எடையுள்ள ரசாயன வெடிகுண்டுகள் பால்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1942 வாக்கில் நடைபெற்ற இரண்டாம் உலக போரில் ஹிட்லரின் ஜெர்மனியை எதிர்த்து நேச நாடுகள் கடுமையாக போர் தொடர்ந்தன. பதிலுக்கு ஜெர்மனியும் புதிய புதிய ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளை திக்குமுக்காட செய்து வந்தது. 1945ல் இரண்டாம் உலகப்போர் ஜெர்மனியின் வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது. அப்போது நாஜிக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள், […]
Continue reading …
கடந்த 2018ம் ஆண்டு நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராகப் பதவியேற்றார் இம்ரான் கான். கடந்த ஏப்ரல் 10ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது. எனவே புதிய பிரதமராக முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டில் அவருக்கு ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உதவியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு நகைக் கடையில் விற்கப்பட்டதாகவும் புகார் […]
Continue reading …
சீனா 11 ஏவுகணைகளை அடுத்தடுத்து தைவான் கடல்பகுதியில் வீசியுள்ளதால் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருவதால் தைவானில் கடல் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவர் தைவான் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து போர் பயிற்சி செய்வதாக கூறி வரும் சீனா, தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் தைவானுக்கு ஆதரவாக உள்ளதால் தென் சீன கடலில் தொடர்ந்து பதற்றம் […]
Continue reading …
சர்வதேச விண்ªªளி நிலையத்திலிருந்து மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதல் தொடர்ந்து 150 நாட்களைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரஷ்யா போரிட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை பாதிக்கும் என ரஷ்யா விண்வெளி ஆய்வு நிறுவனமாக ரோஸ்கோஸ்மாஸ் எச்சரித்தது. […]
Continue reading …
போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர். போலீசார் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரியோவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரெசில் நாடான ரிலோ டி ஜெனிரியோவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கடத்தல் கும்பல் பதுங்கியிருந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலிசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடத்தல் கும்பல் மீது தாக்குதல் நடத்தினர். இதில், கடத்தல்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
Continue reading …
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவர் மட்டுமே தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் மட்டுமே உள்ளனர்.இருவரில் ஒருவர் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து கணிப்பு நேற்று வெளியானது. கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கை […]
Continue reading …
நாளை தேசிய விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரைப்படமான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ போன்ற திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ ஆகிய படங்களுக்கு நாளை அறிவிக்கப்படும் தேசிய விருதில் விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக […]
Continue reading …
அமெரிக்காவில் தஞ்சையின் காணாமல் போன 200 ஆண்டு பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் புராதன பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் விற்கப்பட்டு வருகிறது. தற்போது ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு மீட்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தஞ்சை சரஸ்வதி மகாலில் காணாமல்போன 200 ஆண்டுகள் பழமையான சரபோஜி சிவாஜி ஓவியம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஓவியத்தை இந்தியா கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக […]
Continue reading …