நியூயார்க் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுகிறதா சீனா?

Filed under: உலகம் |

சீன அரசு நிறுவனங்கள் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் பங்கு சந்தையில் இருந்து சீன அரசுக்கு சொந்தமான ஒரு சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் தற்போது வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன பெட்ரோலியம் கார்ப்பரேஷன், சீன லைப் இன்சூரன்ஸ், சைனோபெக் ஆகிய நிறுவனங்களில் நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க அரசின் தணிக்கை விதிகளுக்கு சீனா இணங்காவிட்டால் தாராளமாக பங்குச்சந்தைகள் விட்டு வெளியேறலாம் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.