
உலக குத்து சண்டை போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கணை நிகாத் சரீன். துருக்கி நாட்டில் இஸ்ததன்புல் நகரில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தைச் சேர்ந்த நிகாத் சரீன் இறுதி போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார். 52 கிலோ எடைப்பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5&0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார். உலக […]
Continue reading …
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 10 வர்த்தக நாட்களில் தொடர்ந்து ஐந்து முறை சரிந்துள்ளது. நேற்று வரை இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.61 காசுகளாக சரிந்தது. இன்று மேலும் 12 காசுகள் சரிந்து தற்போது ரூ.77.73 ஆக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு வேகமாக சரிவை கண்டு வருகிறது. இதே போல பெட்ரோல், டீசல் விலை, எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் […]
Continue reading …
தற்போது பிரான்ஸ் நாட்டில் உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலகெங்கிலுமிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இவ்விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், மாதவன், பா.ரஞ்சித், ஏ.ஆர்.ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, நவாசுதின் சித்திக், ஊர்வசி ரவ்துலா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் “லே மஸ்க்“ திரைப்படம், மாதவன் இயக்கி […]
Continue reading …
கருப்பு பெட்டியை ஆராய்ந்தபோது திட்டமிட்டு விமான விபத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி குவாங்சி மாகாணத்தில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் சென்ற 132 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டிகளை கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க புலனாய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விமானத்தில் விபத்திற்கு முன் எந்த பழுதும் ஏற்படவில்லை என்றும், விமானத்தை இயக்கியவர்களில் யாரேனும் ஒருவர் […]
Continue reading …
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட ரஷ்ய ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு கனடாவில் நுழைவதற்கு தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது கடந்த பல மாதங்களாக போர் நடத்தி வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் இந்த போரை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன. கனடா அரசு இந்த போர் விவகாரத்தில் ரஷ்யாவை கண்டித்துள்ளதுடன் உக்ரைனில் இருந்து அகதிகளாய் வெளியேறும் […]
Continue reading …
மிகப்பெரும் கண்டம்தான் பூமியின் தென் துருவ பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா. மிகப்பெரிய பனி பாலைவனமாகும். இங்கு மனிதர்கள் வசிக்க இயலாது. அதனால் ஆராய்ச்சிக்காக மட்டுமே சில ஆய்வறிஞர்கள் அண்டார்டிகா சென்று வருகின்றனர். தென் துருவத்தில் அமைந்துள்ளதால் பூமியின் சாய்வு கோணத்தால் ஆண்டுதோறும் 4 மாதங்கள் அண்டார்டிகா இருளில் மூழ்கி விடும். இந்த நான்கு மாதங்களுக்கு சூரியனையே அண்டார்டிகாவில் பார்க்க முடியாது என்பதால் இதை “நீண்ட இரவு “Long Night” என்று அழைப்பார்கள். தற்போது பூமியின் தென் துருவ […]
Continue reading …
சுவிஸ் நாட்டின் கட்டுமான நிறுவனத்தின் இந்திய பிரிவை பிரபல தொழிலதிபர் அதானி வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டின் கட்டுமான நிறுவனமான ஹோல்சிம் இந்திய பிரிவின் சிமெண்ட் நிறுவனங்களை தொழிலதிபர் அதானி வாங்குகிறார். இந்த நிறுவனங்களை அவர் 1050 கோடிக்கு வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரண்டு சிமெண்ட் நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த நிறுவனத்தை அதானி வாங்கியவுடன் இந்தியாவின் உள்நாட்டு சிமெண்ட் உற்பத்தியில் இரண்டாவது பெரிய சிமெண்ட் […]
Continue reading …
இலங்கை பிரதமராக பதவியேற்ற ரனில் விக்ரமசிங்கே இனி தினசரி 15 மணி நேரம் மின்வெட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே மக்கள் பெரும் துன்பத்தில் இருக்கின்றனர். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து வரப்போகும் இரண்டு மாதங்களுக்கு இலங்கைக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்றும் இலங்கையில் மின் தட்டுப்பாடு தினமும் 15 மணி நேரம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுமார் 75 மில்லியன் அமெரிக்க […]
Continue reading …
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவ்வப்போது திடீர் திடீரென ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களை பொதுமக்கள் அதிக அளவு வாங்கி வரும் நிலையில் திடீர் திடீரென நாடு முழுவதும் பேட்டரி வெடித்து தீ பிடிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே எலெக்ட்ரிக் […]
Continue reading …
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனால், வட கொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்முதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அந்த நபர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகியுள்ளதால் […]
Continue reading …