Sunக்கு பை பை!

Filed under: உலகம் |

மிகப்பெரும் கண்டம்தான் பூமியின் தென் துருவ பகுதியில் அமைந்துள்ள அண்டார்டிகா. மிகப்பெரிய பனி பாலைவனமாகும். இங்கு மனிதர்கள் வசிக்க இயலாது.

அதனால் ஆராய்ச்சிக்காக மட்டுமே சில ஆய்வறிஞர்கள் அண்டார்டிகா சென்று வருகின்றனர். தென் துருவத்தில் அமைந்துள்ளதால் பூமியின் சாய்வு கோணத்தால் ஆண்டுதோறும் 4 மாதங்கள் அண்டார்டிகா இருளில் மூழ்கி விடும். இந்த நான்கு மாதங்களுக்கு சூரியனையே அண்டார்டிகாவில் பார்க்க முடியாது என்பதால் இதை “நீண்ட இரவு “Long Night” என்று அழைப்பார்கள்.

தற்போது பூமியின் தென் துருவ பகுதியான அண்டார்டிகா லாங் நைட் எனப்படும் நீண்ட இரவுக்குள் சென்று விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.