Home » Archives by category » உலகம் (Page 50)

இலங்கைக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை!

Comments Off on இலங்கைக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை!

இலங்கை ரிசர்வ் வங்கியின் கவர்னர் இலங்கையின் பொருளாதார நிலை இதே ரீதியில் சென்றால் சோமாலியா ஜிம்பாப்வே போன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் பிரதமர் பதவி விலகி மூன்று நாட்களாகி விட்டது. ஆனால் இதுவரை புதிய பிரதமர் நியமிக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் கடும் வீழ்ச்சியடையும். இதனை அடுத்து தான் தனது பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்றும் இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் […]

Continue reading …

அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

Comments Off on அமேரிக்காவில் வறண்ட ஏரியில் மனித உடல்கள்!

மிகப்பெரிய ஏரியான மீட் ஏரி அமேரிக்காவில் வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. அதில் மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய நீர் தேக்க ஏரியான மீட் ஏரி நாளுக்கு நாள் வறண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் கடந்த 2001ம் ஆண்டு முதல் வேகமாக வளற தொடங்கிய ஏரி தற்போது முற்றிலும் வற்றும் நிலையில் உள்ளது. ஆனால், ஏரியின் வறண்ட பகுதிகளிலிருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இரும்பு […]

Continue reading …

இலங்கை அதிபருக்கு கடும் எதிர்ப்பு

Comments Off on இலங்கை அதிபருக்கு கடும் எதிர்ப்பு

அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்த அவசர நிலை அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல வாரங்களாக நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களால் நெருக்கடி அதிகரித்து வருவதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே. அதிபரின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக மனித உரிமை அமைப்புகள், வக்கீல் சங்கங்கள், எதிர்க்கட்சிகள் […]

Continue reading …

புலிட்சர் விருது அறிவிப்பு

Comments Off on புலிட்சர் விருது அறிவிப்பு

2வது முறையாக டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது தரப்படுகிறது. இந்த வருடத்திற்கான புலிட்சர் விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கொரோனாவின்போது உலகம் கண்ட கொடூரங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்காக ஃபீச்சர் புகைப்படங்கள் […]

Continue reading …

பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே

Comments Off on பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே

மகிந்த ராஜபக்சே இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.   இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். ஒரு கிலோ ஆப்பிள் ரூ.1000, ஆகவும், பேரிக்காய் ரு.1500 ஆகவும் சந்தையில் விற்கப்படுகிறது. பணக்கார்களை தவிர ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் அரசின் மீது மக்களும் வியாபாரிகளும் கோபத்தில் உள்ளனர். மேலும் சீனாவிற்கு அனைத்தையும் இலங்கை அரசு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட […]

Continue reading …

உலக நாடுகள் அதிர்ச்சி!

Comments Off on உலக நாடுகள் அதிர்ச்சி!

உலக நாடுகள் பலவும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ள எபோலா வைரஸினால் அதிர்ச்சி உள்ளாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் முழுவதும் மீளாத நிலையில் மீண்டும் தற்போது எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   உலகம் முழுவதும் கொரோனாவிற்கு முன்னர் மக்களை உலுக்கிய மோசமான வைரஸ் தொற்றுகளில் முக்கியமானது எபோலா வைரஸ். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில ஆண்டுகளில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா […]

Continue reading …

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!

Comments Off on பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி!

பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற முதியவர் திடீரென உயிர்பெற்று எழுந்த சம்பவம் சீனாவில் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் ஹாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஷாங்காயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கருதப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்காக அவரை பிணவறை கொண்டு சென்றபோது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளன. […]

Continue reading …

புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

Comments Off on புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப்

உலகத்தையை நம் கைக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்போனின் அவசியம் பெரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் ஆப் பெரிதளவில் மக்கள் மத்தியில் உபயோகிக்கும் ஒரு செயலியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. செல்போன் வைத்திருப்போரின் விருப்பத்திற்குரிய ஆப்பாக வாட்ஸ் ஆப் உருமாறி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப பல சிறந்த அப்டேட்டுகளை அறிந்து, பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்புகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இனி அதிகபட்சமாக குரூப் […]

Continue reading …

எலான் மஸ்க் டுவீட்

Comments Off on எலான் மஸ்க் டுவீட்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சமீப காலமாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முயற்றிப்பதாக தகவல்கள் வெளியானது. உலகம் முழுவதிலும் அநேக மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது டுவிட்டர். டுவிட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய டுவிட்டர் அழைப்பு விடுத்தது. டுவிட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் […]

Continue reading …

டுவிட்டரில் இருந்து வெளியேறிய நடிகை!

Comments Off on டுவிட்டரில் இருந்து வெளியேறிய நடிகை!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதால் அதிர்ச்சி அடைந்த ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது டுவிட்டரில் அக்கவுண்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாயுடன் இருக்கும் புகைப்படத்தை கடைசியாக பகிர்ந்த ஹாலிவுட் நடிகை ஜமீலா ஜமீல் இதுவே எனது கடைசி டுவிட் என்று தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதால் மேலும் பல பிரபலங்கள் டுவிட்டரில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் […]

Continue reading …