பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே

Filed under: உலகம் |

மகிந்த ராஜபக்சே இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். ஒரு கிலோ ஆப்பிள் ரூ.1000, ஆகவும், பேரிக்காய் ரு.1500 ஆகவும் சந்தையில் விற்கப்படுகிறது. பணக்கார்களை தவிர ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.எரிபொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் அரசின் மீது மக்களும் வியாபாரிகளும் கோபத்தில் உள்ளனர். மேலும் சீனாவிற்கு அனைத்தையும் இலங்கை அரசு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு நிதி உதவி கேட்டிருந்த நிலையில், இந்திய அரசு ரூ.7,500 கோடிக்கு மேல் கடனுதவி செய்தது. சமீபத்தில் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் திமுக சார்பில் பண உதவி வழங்கப்பட்டது.

இலங்கை அரசுக்கு எதிராகவும் ராஜபக்சே பதவி விலகக் கோரியும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று, ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 23 பேர் காயம் அடைந்துள்ளனர். நெருக்கடி முற்றியுள்ள நிலையில், 2019ம் வருடம் முதல் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து, மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.