
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சமீபத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. எனவே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீது பல விமர்சனங்களை அதிமுக முன்வைத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து, […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை உள்ளிட்ட பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்னும் ஒரு சில மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ். பேட்டியில், “அமமுகவுடன் எங்கள் அமைப்பு இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது. பிரதமரிடம் நேற்று சந்தித்தபோது அவரிடம் அரசியல் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் அமைந்துள்ளது. இபிஎஸ் குறித்த ரகசியத்தை நான் வெளியே சொல்ல முடியாது. அது தெரிய […]
Continue reading …
டிஐஜி போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த இரண்டு காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் என்ற காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்ததாக தெரிகிறது. கடந்த 27ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் இருவரும் ஆயுத படைக்கு மாற்றப்பட்டனர். சம்பந்தப்பட்ட இருவரையும் டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபதாரமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது. இதுதீர்ப்பினை அடுத்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற […]
Continue reading …
பாஜக கூட்டணியை இவ்வாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 375 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியில் மொத்தம் 25 அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் மட்டுமே 375 தொகுதிகளில் போட்டியிட்டால் மீதமுள்ள 175 தொகுதிகள் மட்டுமே மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதால் இந்தியா […]
Continue reading …
பிரதமர் மோடி இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு வருவதில் பெருமிதம் கொள்வதாக பேசினார். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து அவர் பேசும்போது, “இவ்வாண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் முதல் அரசு நிகழ்ச்சியாகவும் தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது, பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை.களை தொடங்கினர். […]
Continue reading …
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 2.5 மடங்கு கூடுதல் நிதி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முந்தைய காலங்களை விட தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகமாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்” […]
Continue reading …
வாட்ஸ் அப் நிர்வாகம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெசேஜ்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வு மட்டும் இன்றி பண பரிவர்த்தனை வசதியும் தற்போது இதில் உள்ளது. அதேபோல் ஆடியோ கால் வீடியோ கால் வசதியும் உள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு […]
Continue reading …
வானிலை ஆய்வு மையம் அரபிக் கடலில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. தென்கிழக்கு அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளது. இதையடுத்து லட்சத்தீவு, அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் எனவே இந்த பகுதிகளுக்கு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய […]
Continue reading …