
அதிமுகவுக்கு இனி அனைத்து தேர்தல்களிலும் வெற்றியே கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் சமீபத்தில் அதிமுக பிரமாண்டமான மாநாடு நடந்தது. இன்று அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், “மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி தான், இனி அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும். மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டத்தை இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, […]
Continue reading …
வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தாளப்புழா கண்ணோட் மலை அருகே தோட்டமொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். இவ்விபத்தில் காயமடைந்தவர்களை மானந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் 13 […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “பாம்பிடம் சீண்டுவது போல், ஆளுநரிடம் சீண்டினால் கொத்தத் தான் செய்வார்” என திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஆளுநரைப் பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை, ஆளுநரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. ஆளுநரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? பாம்பிடம் சீண்டுவது போல், திமுக […]
Continue reading …
தலைமை செயலக ஊழியர்கள் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை சட்டமன்றமாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு அக்கட்டிடத்தை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றினார். தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை கட்டிடத்தை சட்டமன்றமாக மாற்றப்பட வேண்டும் என்று தலைமைச் செயலக […]
Continue reading …
19 வயது வாலிபர் இன்ஸ்டாகிராமில் கிடைத்த நட்பின் மூலம் அழைத்ததால் லாட்ஜுக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கொல்லாங்காடு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி இன்ஸ்டாகிராமில் 19 வயது வாலிபர் நாகேஷ் உடன் நட்புடன் பழகினார். இதனையடுத்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். வாலிபர் நாகேஷ் பத்தாம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கே வந்து அவரை லாட்ஜிக்கு அழைத்து சென்று பாலியல் […]
Continue reading …
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று திமுக தேர்தலுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தது அதுமட்டுமின்றி அதற்கான விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் முதல் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பம் கொடுத்தவர்களிடம் […]
Continue reading …
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சாலைவிபத்தில் உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு நடந்த சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து […]
Continue reading …
25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த நளினி சமீபத்தில் வெளியானார். அவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. லண்டனில் உள்ள தனது மகளை காண செல்ல வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக பாஸ்போர்ட் வேண்டும் என்றும் கடந்த ஜூன் மாதம் நளினி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு இன்னும் […]
Continue reading …
இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கி சாதனை படைத்துள்ளது. சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா, சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்கு நீர் உள்ளதாக கண்டறிந்தது. இதையடுத்து, சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக […]
Continue reading …
மத்திய கல்வி அமைச்சகம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்வி கொள்கையின்படி இனி பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எடுக்கின்றார்களோ அந்த மதிப்பெண் […]
Continue reading …