ஜீப் கவிழ்ந்து விபத்தில் 9 பேர் பலி

Filed under: தமிழகம் |

வயநாட்டில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தாளப்புழா கண்ணோட் மலை அருகே தோட்டமொன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். இவ்விபத்தில் காயமடைந்தவர்களை மானந்தவாடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும் 13 பேர் பயணம் செய்தனர். விபத்தில் பலியானவர்கள் அனைவரும், வயநாட்டைச் சேர்ந்தவர்கள்.