
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் நம் மாணவர்கள் பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம்’’ என்று தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் பலவும் நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றது. மத்திய பாஜக அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் ஆகஸ்ட் 20ம் தேதி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் […]
Continue reading …
இன்று இணையத்தில் பிரபலமான அஸ்வினியை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். அஸ்வினி சென்னையடுத்துள்ள மகாகபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரியில் வசித்து வருபவர். இவர் தலசயன பெருமாள் கோயிலில் தங்கள் சமூகத்தினருடன் அன்னதானம் சாப்பிட சென்றபோது கோயில் நிர்வாகிகளால் அவமதிக்கப்பட்டதாக வீடியோவில் புகாரளித்திருந்தார். இதையடுத்து அமைச்சர் சேகர் பாபு அப்பெண்ணுடனுடனும் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தோருடன் அமர்ந்து சாப்பிட்டார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது, அஸ்வினியின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நலத்திட்டம் வழங்கி அவர் வீட்டில் சாப்பிட்டார். அதன்பின், இவர் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘அதிமுக மாநாடு நடக்கவுள்ளதால், இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 20ம் தேதி நீட் எதிர்ப்பு போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது’ என்று விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின் மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறும் இம்மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் “ஜெயிலர்” காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்த அமைச்சர் முன்னாள் அமைச்சர் […]
Continue reading …
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தென்மேற்கு பருவமழையை விட ஆறு சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “கடந்த 24 மணி நேரத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூர் பகுதியில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை தென்மேற்கு பருவமழை இயல்பை விட ஆறு சதவீதம் அதிகம் பெய்துள்ளது. மேலும் சென்னை […]
Continue reading …
கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் “ஜாதியை கூட மன்னித்து விடலாம் ஆனால் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார். நாங்குநேரியில் சமீபத்தில் பட்டியலின மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு சாதியைக்கூட மன்னிக்கலாம் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது […]
Continue reading …
மிக நூதனமாக முறையில் வெளியே பேன்சி ஸ்டோர் வைத்து உள்ளே கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் பேன்சி ஸ்டோர் இயங்கி வருகிறது. கடையில் வேலை செய்யும் அண்ணாதுரை கோழி வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு சற்று வித்தியாசமாக இருந்ததையடுத்து கோழிக்கடைக்காரர் சந்தேகமடைந்து காவல்துறையினர்களிடம் அவரை பிடித்து கொடுத்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோதுதான் பேன்சி ஸ்டோரில் கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு தனி […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே #NEET பலி பீடத்தின், கடைசி மரணமாக இருக்கட்டும்! அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும், “நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “77-வது விடுதலை நாள் விழாவினையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குமரிக் கடல் முதல் இமயப் பெருமலை வரை வாழும் மக்கள் ஒன்றுபட்ட சிந்தனையுடன் போராடிப் பெற்றதே இந்திய நாட்டின் விடுதலை ஆகும். அப்போது வாழ்ந்த முப்பது கோடி மக்களும் நாட்டு விடுதலைக்காகப் போராடியதன் விளைவே 1947 ஆகஸ்ட் 15 அன்று கிடைத்த வெற்றிச் செய்தி. இன்று. நாம் இந்தியத் திருநாட்டின் 77-வது […]
Continue reading …
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு, சனி ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறையை அடுத்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்குவரத்து துறை ஏற்கனவே 2,100 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சென்ற நிலையில் கூடுதலாக 543 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் மொத்தம் உள்ள 2643 பேருந்துகளில் 1,32,150 பேர் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக […]
Continue reading …
கவர்னர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், “ஒரு பெற்றோராக நீட் தேர்வு தடை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்” என்று ஒருவர் கேள்வி எழுப்பியபோது “நீட் தேர்வுக்கு ஒருபோதும் நான் தடை கொடுக்க மாட்டேன். நமது குழந்தைகளை கஷ்டத்திற்கு ஆழ்த்த நான் விரும்பவில்லை. நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று படிக்க […]
Continue reading …