Home » Archives by category » தமிழகம் (Page 157)

ஆளுனரின் அடுத்த நடவடிக்கை என்ன?

Comments Off on ஆளுனரின் அடுத்த நடவடிக்கை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டில்லி சென்றார். அவர் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி பயணத்தின் போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது. டில்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி […]

Continue reading …

பாஜக பிரமுகர் எச்.ராஜா டுவிட்!

Comments Off on பாஜக பிரமுகர் எச்.ராஜா டுவிட்!

பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான், அதன் பிறகு தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா? என்பதை பார்ப்போம்” என்று பதிவு செய்துள்ளார். மூன்றாவது நீதிபதியின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பை பொறுத்து தான் செந்தில் பாலாஜி […]

Continue reading …

வானதி சீனிவாசன் ஆவேசம்!

Comments Off on வானதி சீனிவாசன் ஆவேசம்!

சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கொடுப்பதாக கூறினார். ஆனால் 15 ரூபாய் கூட கொடுக்கவில்லை” என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியும், “மோடி 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறினார், ஆனால் தரவில்லை” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “ரூபாய் 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் வெளியிட வேண்டும். ஆதாரத்தை […]

Continue reading …

தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

Comments Off on தமிழ்நாடு அமைதி பூங்கா: முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து […]

Continue reading …

கலெக்டரின் வேண்டுகோள்!

Comments Off on கலெக்டரின் வேண்டுகோள்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் காட்பாடியில் உள்ள தனியார் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்ட விவகாரம் குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் அது, உணவக பிரச்சினையை, சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடியிருந்தனர், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவே, […]

Continue reading …

வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!

Comments Off on வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!

வெளிமாநிலங்களிலிருந்து வரவேண்டிய காய்கறிகள் கடந்த சில தினங்களாக பெய்யும் பருவமழை காரணமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி இஞ்சி பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போதைய விலை நிலவரத்தின் படி தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு […]

Continue reading …

சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

Comments Off on சுகாதாரத்துறை செயலாளரின் உத்தரவு!

தமிழக சுகாதாரத்துறை செயலாளார் சுகன்தீப் சிங் பேடி தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் […]

Continue reading …

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

Comments Off on தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடந்த மாதம் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை “மதுரை உயர்நீதிமன்றம் கலைஞர் போட்ட பிச்சை” என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. “சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை” என்கிறார் அமைச்சர் எவ வேலு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று […]

Continue reading …

மின் வேலிகள் அமைக்க அனுமதி கட்டாயம்!

Comments Off on மின் வேலிகள் அமைக்க அனுமதி கட்டாயம்!

தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.சூரியசக்தி மின் வேலிகள் உள்பட அனைத்து மின் வேலிகள் அமைப்பதற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதனை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் வேலிகள் அமைப்பு என்பது காப்பு காடுகளிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயி […]

Continue reading …