பாஜக பிரமுகர் எச்.ராஜா டுவிட்!

பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக ஆட்டம் இன்னும் 48 மணி நேரம் தான், அதன் பிறகு தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆட்சியே முடிவுக்கு வருமா? என்பதை பார்ப்போம்” என்று பதிவு செய்துள்ளார்.

மூன்றாவது நீதிபதியின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தீர்ப்பை பொறுத்து தான் செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையை அமலாக்க துறையை எடுக்க உள்ளனர். பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுகவின் ஆட்டம் இன்னமும் 48 மணி நேரம்தான். செந்தில் பாலாஜி இருக்கிறாரா? இருந்தால் காவிரி மருத்துவ மனையில் தான் உள்ளாரா என்கின்ற பல சந்தேகங்கள் தீர்க்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக அரசின் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வரும். ஆட்டம் முடிவிற்கு வருமா அல்லது ஆட்சியேவா?” என்று பதிவிட்டுள்ளார்.