
திமுக நிர்வாகி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11வது அறிக்கையை […]
Continue reading …
எஸ்.பி. வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2ம் தேதி கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். ஆதார் கார்டில் உள்ள எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் பரவி உள்ளது. இதையடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் […]
Continue reading …
அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்- என்று விமர்சித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், மூன்று தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியில், அதிமுக எதிக்கட்சித் தலைவர், எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், “கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதிமுக அலுவலகத்தை ரவுடிகளுடன் வந்து, இடித்து, புத்தகங்களை எடுத்துச் சென்றால் எப்படி […]
Continue reading …
சேப்பாக்கம் தொகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தொகுதியில் உதயநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் ரவி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், “உதயநிதி ஸ்டாலின் தனது வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அளித்துள்ளார். […]
Continue reading …
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலைக்கு தீபத்திருவிழா நடைபெற இருப்பதை அடுத்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வரும் டிசம்பர் 6ம் தேதி மற்றும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துதுறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை பொருத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை […]
Continue reading …
கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி செல்வராசு வரும் நவம்பர் 28ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும், மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளும் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த டெல்டா பகுதிகளை தொடர்ந்து தெற்கு ரயில்வேத்துறை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ள நாகை தொகுதி எம்.பி. செல்வராசு, இதைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, “டெல்டா பகுதிகளை […]
Continue reading …
டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும் என்று அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் அந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணிகளும் இம்முறை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தலில் திமுகவை எந்த கூட்டணி வீழ்த்துகிறதோ, அந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் என்று […]
Continue reading …
சென்னையில் காவல்துறை பிராங்க் வீடியோ எடுக்கும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளது. சென்னையை சேர்ந்த ரோகித் குமார் வீடியோ வெளியிடும் கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய் மணிவேல், நாகை 360 ஆகிய ஐந்து யூடியூப் சேனல்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். ரோகித் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் மக்கள் […]
Continue reading …
திருநெல்வேலியில் தன் மகளையே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து அருகே பாலாமடை பகுதியில் நர்சிங் படிக்கும் 19 வயது அருணா என்ற இளம்பெண்ணை அவரது தாயாரே கொலை செய்துள்ளார். மகளை கொலை செய்த பின்னர் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நர்சிங் படித்து வந்த அருணா, அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதல் […]
Continue reading …