ஓபிஎஸ் பற்றி ஜெயக்குமார் விமர்சனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்- என்று விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், மூன்று தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியில், அதிமுக எதிக்கட்சித் தலைவர், எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், “கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதிமுக அலுவலகத்தை ரவுடிகளுடன் வந்து, இடித்து, புத்தகங்களை எடுத்துச் சென்றால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அவரது மகனும் கலைஞரின் வசனங்களுக்கு ரசிகர்கள் என்றும் கூறிவருவதை எப்படி ஏற்க முடியும்? திமுகவின் ஒட்டுமொத்த ஊதுகுழலாக அவர் இருக்கும் நிலையில், பொதுக்குழுவால் எப்படி சேர்க்க முடியும்! பொதுகுழுதான் அவர்களை நீக்கியது” என்று கூறியுள்ளார்.