
போக்குவரத்து காவல்துறை மது அருந்தி வாகனம் ஓட்டி காவலர்களிடம் சிக்கும் வாகனங்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அபராதம் செலுத்தாவிட்டால் வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என எச்சரித்துள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில், சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட புதிய வாகன சட்டத்தின்படி மது அருந்தி வாகனம் ஓட்டி வருபவருடன் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அதன் அடிப்படையில் […]
Continue reading …
இன்று திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜ் சாலையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு திருப்பூரை அடுத்த படியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகள் ஆனந்தி பயிற்சி எடுத்து வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் ஆனந்தி பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார், அவரைக் காண்பதற்கு அவரது காதலர் வந்துள்ளார். […]
Continue reading …
இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த மம்தா பானர்ஜி சந்தித்த நிலையில் தேசியளவில் மாற்றம் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்குமென்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளரிடம், “இது ஒரு மரியாதை […]
Continue reading …
90 நாட்கள் வரை இருக்கும் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாக தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடிய டிலைட் என்ற […]
Continue reading …
மத்திய அமைச்சகம் தமிழகத்தில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் 25% உயர்ந்திருப்பதற்காக கூறியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களை இந்த அரசு அறிவித்து வரும் நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டில் அக்டோபர் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாய் 25% உயர்ந்து ரூ.9540 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளதாவது: 2022ம் ஆண்டு, கடந்த ஏப்ரல் […]
Continue reading …
மின்சார வாரியம் ரூ.2000 மின்கட்டணம் வந்தால் இனிமேல் நேரடியாக அலுவலகம் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ரூபாய் 5000 மற்றும் அதற்கு மேல் மின் கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தி வருகின்றனர். ரு.5000க்குள் மின்கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைனில் ஆகிய இரண்டின் வழியாகவும் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் […]
Continue reading …
தமிழக காவல்துறை நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் தடை விதித்து அதற்கு பதிலாக வேறொரு தினத்தில் ஊர்வலம் நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 6ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது. […]
Continue reading …
காவல்துறை அதிகாரிகள் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் விசாரணையை சிறப்பாக செய்ததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை கார் வெடி குண்டு வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட உளவுப்பிரிவு, சைபர் கிரைம், கிரைம் பிராஞ்ச் காவல்துறையினருக்கு 15 பேருக்கு முதலமைச்சரின் விருது வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை கால் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த […]
Continue reading …
மனித உரிமை ஆணையம் ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மர்மமான முறையில் சுவாதி கொலை வழக்கில் மரணமடைந்த ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் மின்சாரவயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்திய பின் […]
Continue reading …
கோவை மாநகரில் கார் வெடித்த சம்பவத்தில் சதி முயற்சி செய்ததாக இறந்த முபின் உடலை அடக்கம் செய்வதற்கு அனைத்து ஜமாத்துகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர். கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார். இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று […]
Continue reading …