
தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் காரைக்கால், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறாக வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் பலர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 4 படகுகளில் வந்த […]
Continue reading …
திருவண்ணாமலையில் வீட்டிற்குள் மாந்திரீக பூஜை செய்வதை அறிந்து போலீசார் பொக்லைன் வைத்து இடித்துள்ளனர். கேரளாவில் கடந்த சில காலமாக நரபலி, மாந்த்ரீக பூஜை தொடர்பான செய்திகள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையிலும் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தசராபேட்டை கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளியான தவமணிக்கு, காமாட்சி என்ற மனைவியும், பூபாலன், பாலாகி என்ற இரண்டு மகன்களும், கோமதி என்ற மகளும் உள்ளனர். கோமதிக்கு அரியப்பாடியை சேர்ந்த பிரகாஷ் என்பவதை திருமணம் செய்து […]
Continue reading …
உதயநிதி ஸ்டாலின், எந்த வழிகளில் இந்தியை திணித்தாலும் நாங்கள் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான் அது “இந்தி தெரியாது போடா” என்று கூறியுள்ளார். இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி சார்பில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது “ஹிந்தி தெரியாது போடா” […]
Continue reading …
13 கிராம மக்களும் பரந்தூரில் அமைக்கப்போகும் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். மத்திய மாநில அரசுகள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளன. ஆனால் இங்கு விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடினர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13 கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என […]
Continue reading …
பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் “சிறார் திரைப்பட விழா திட்டம்” என் முறையில் இன்று திரையிடப்படுகிறது. தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்கள் திரையிடப்படப்படுகிறது. மாதம்தோறும் இரண்டாவது வாரம் இத்திரைப்படங்கள் திரையிடபடுகின்றன. அவ்வகையில் இந்த வாரம் பள்ளி […]
Continue reading …
பெங்களூரில் பேருந்து கண்டக்டர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 10 ரூபாய் நாணயத்தை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுதும் உள்ள கிராமங்களில் வாங்க மறுப்பதாகவும், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள பெரும்பாலான பேருந்து கண்டக்டர்கள் […]
Continue reading …
சைபர் கிரைம் போலீசார் யோ-யோ ஆப்பில் சிக்கிய இளம் பெண்கள் பற்றிய விபரங்களை எடுத்துரைத்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவையில் அழகான ஆண்கள் படத்தை வைத்து பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டிய அழகுராஜாவை போலீசார் பிடித்துள்ளனர். அழகிய ஆண்கள் படங்களை புரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டு பணம் பறித்த நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர். யோ-யோ என்ற ஆப் […]
Continue reading …
கவிஞர் வைரமுத்து தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?- என்று கேள்வியெழுப்பியுள்ளார். அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு, இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததோடு மட்டுமல்லாமல், ஐ.நா சபையின் அலுவல மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது. சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் […]
Continue reading …
தென்னக ரயில்வே கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் மற்றும் கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் […]
Continue reading …
பள்ளி மாணவிக்கு மாணவர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் நின்று தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த வீடியோவை வெளியிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலையருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளி சீருடையில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பாலிடெக்னிக் மாணவர் திடீரென தாலியை அந்த மாணவிக்கு கட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]
Continue reading …