பெங்களூர் மக்களின் புகார்!

Filed under: இந்தியா,தமிழகம் |

பெங்களூரில் பேருந்து கண்டக்டர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

10 ரூபாய் நாணயத்தை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுதும் உள்ள கிராமங்களில் வாங்க மறுப்பதாகவும், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள பெரும்பாலான பேருந்து கண்டக்டர்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் மளிகை கடை பூக்கடை ஆகிய கடைகளில் கூட பத்து ரூபாய் நாணயத்தை வாங்க வியாபாரிகள் தயங்கி வருவதாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். எனவே பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்பவர்கள் அதை பரிமாற்றம் செய்ய முடியாமல் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறிவருகின்றனர்.