Home » Archives by category » தமிழகம் (Page 237)

புதுவையில் 747 குழந்தைகள் பாதிப்பு!

Comments Off on புதுவையில் 747 குழந்தைகள் பாதிப்பு!

மிக வேகமாக புதுவையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுவையில் இன்புளுயன்சா என்ற காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குழந்தைகளுக்கு மிக வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை புதுவையில் 747 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் புதிதாக 50 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் […]

Continue reading …

அமைச்சர் “ஹலால்” வார்த்தைக்கு விளக்கம்!

Comments Off on அமைச்சர் “ஹலால்” வார்த்தைக்கு விளக்கம்!

அமைச்சர் நாசர் ஆவின் பொருட்களில் ‘ஹலால்’ வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதை குறித்து விளக்கமளித்துள்ளார். ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தை இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், “‘ஹலால்’ என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் விற்பனை செய்ய முடியும். அதனால்தான் அந்த வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. ஹலால் என்ற வார்த்தை அச்சிடும் நடைமுறை கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து தொடர்கிறது” என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், முன்னதாக ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தையை அச்சிடப்பட்டு இருந்ததால் அதை […]

Continue reading …

கோவை, திருப்பூரில் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம்!

Comments Off on கோவை, திருப்பூரில் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம்!

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இந்து முன்னணியினர் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி ஆ.ராசா சமீபத்தில் இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது பேச்சு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் இந்த பேச்சு இந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து மத அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. ஆ.ராசா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என […]

Continue reading …

1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்!

Comments Off on 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை முதல் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்- நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் சென்னை உட்பட பல பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. நாளை தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் நாளை  1000  இடங்களில் சிறப்பு காய்ச்சல் […]

Continue reading …

தமிழகத்தில் தீபாவளிக்கு முன்பே சட்டப்பேரவை கூடுகிறதா?

Comments Off on தமிழகத்தில் தீபாவளிக்கு முன்பே சட்டப்பேரவை கூடுகிறதா?

தமிழகத்தில் தீபாவளிக்கு முன்பே சட்டப்பேரவை கூட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யும் மசோதா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அறிக்கை ஸ்மார்ட் கார்டு தொடர்பான அறிக்கை ஆகியவை […]

Continue reading …

இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

Comments Off on இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

இலங்கை கடற்படையினர் மீண்டும் 8 தமிழக மீனவர்கள் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் விசைப்படகில் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகை சுற்றிவளைத்தனர். மேலும் படகில் இருந்த 8 […]

Continue reading …

நாளை குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!

Comments Off on நாளை குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 21ம் தேதி அதாவது நாளை கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் 28 வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் தகுதியுள்ள நபர்கள் […]

Continue reading …

யுஜிசி புதிய உத்தரவு!

Comments Off on யுஜிசி புதிய உத்தரவு!

யுஜிசி கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகளில் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளில் நடத்தப்படும் ராகிங்கை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி அமைக்க இந்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ராகிங் எனப்படும் சீண்டல் குற்றங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. ராகிங் குற்றங்களை குறைக்க கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் ராகிங் தடுப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து யுஜிசி […]

Continue reading …

பால்வளத்துறை அமைச்சரின் புதிய தகவல்!

Comments Off on பால்வளத்துறை அமைச்சரின் புதிய தகவல்!

பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் நிறுவனத்திற்கு தினமும் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் இனிப்பு பொருட்கள் விலை உயர்த்தப்பட்டது பற்றி கூறிய அமைச்சர் நாசர், “ஆவின் நிறுவனம் தினமும் ரூ.85 லட்சம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் அதனால்தான் இனிப்புகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்கக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். பால் கொள்முதல் விலை அதிகரிப்பு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் […]

Continue reading …

புதுமணப்பெண் தற்கொலை

Comments Off on புதுமணப்பெண் தற்கொலை

திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரிப் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிச்செட்டிபாளையம் அருகே கோபிச்செட்டிபாளையம் அருகே பொலவக்ககாளிபாளையம் தோட்டக் காட்டூரில் திருவேங்கடசாமி மற்றும் மரகதமணி வசித்து வருகின்றனர். இவர்களது மகள் இந்து கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவருக்கும் நல்லககண்டன்பாளையம் துளசி நகரைச் சேர்ந்த விஷ்ணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது. தம்பதியர் இருவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த […]

Continue reading …