
சமூக ஆர்வலர் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியைப் பற்றி புகார் அளித்ததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி குறித்து காவல்துறையில் புகார் அளித்த சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, “கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் […]
Continue reading …
நீதிமன்றம் பள்ளி மாணவ மாணவர்கள் மது குடிப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால் மது விற்பனையை தடை செய்ய நேரிடும் என்றும், இதை செய்யாவிட்டால் மதுவிற்பனை தடை செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை […]
Continue reading …
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் திரு.ஷண்முகம் (ஷம்ம) மறைவு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரிவுத் தலைவராக பணியாற்றிய ஷண்முகம் @ ஷம்மி ( வயது 52) காலமானார். உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த ஷண்முகம் @ ஷம்மி சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று (10-09-2022) இயற்கை எய்தினார் . நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக பணியாற்றி வந்த ஷண்முகம் நியூஸ் 7 தமிழின் பேசும் […]
Continue reading …
திமுக பிரமுகர் ராஜிவ்காந்தி நீட் தேர்வு என்பது சமூக அநீதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக கூறியுள்ளார். நீட் தேர்வு முறை வேண்டாம் என்பது பற்றி தமிழ் நாடு முன்வைத்துள்ள வாதம் சரியானது. சாதி அதிகளவில் உள்ள இந்தியாவில் 63% ஓபிசி, எம்பிசி மக்கள், பிசி மக்கள், 23% அட்டவணை சாதி மக்கள், மீதி 15% முன்னேறிய மக்கள், 9% உயர்சாதியினர். இத்தனை பாகுபாடுகள் இருந்தாலும் கல்வியில் முன்னேறியுள்ளது தமிழ் நாடு. இந்த நீட் தேர்வில், 21 லட்சம் […]
Continue reading …
தமிழக அரசு ரேஷன்கடையில் பணிபுரியும் பெண் பணியாளருக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலை கடைகளில் ஆறு மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு வருவதாக புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மாதங்கள் அதாவது 270 நாட்கள் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்கள் ஆகியோர்களுக்கு மகப்பேறு விடுப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் கடைகளில் பணிபுரியும் […]
Continue reading …
இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் காளகஸ்தி நாதம்புரம் பகுதியிலுள்ள பிரதான சாலையில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் இன்று வந்து கொண்டிருந்தன. அப்போது, இடம்புறம் வருவதற்குப் பதில், பைக்கை ஓட்டி வந்தவர் வலது புறம் வந்துள்ளார. எதிர்ப்புறம் வந்த மற்றொரு பைக் அந்த பைக்கின் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, வந்த காரில் எதிர்ப்புறம் வந்தவர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான பாரதிராஜா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாரதிராஜாவின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம் என்றும் எங்களுடைய சொந்த பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் விளக்கமளித்தார். மேலும் அவர் கூறும் போது, […]
Continue reading …
இன்று முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 முதல்- 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட உள்ளது. அதே போல இரண்டு மாதங்களில் 501 முதல் -600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தப்பட உள்ளது. இரண்டு மாதங்களில் 601 முதல்- 700 யூனிட்கள் […]
Continue reading …
பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில், “பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாகவும், 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்களை நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்தவரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Continue reading …
தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் டாடா நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையில் 5,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை […]
Continue reading …