சமூக ஆர்வலர் படுகொலை!

Filed under: தமிழகம் |

சமூக ஆர்வலர் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியைப் பற்றி புகார் அளித்ததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி குறித்து காவல்துறையில் புகார் அளித்த சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, “கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில்  படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது! இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது. அது குறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்! நாட்டின் வளத்தை காக்க போராடி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குக” என்று தெரிவித்துள்ளார்.