Home » Archives by category » தமிழகம் (Page 246)

4 நாட்களுக்கு மழை இன்னும் நீடிக்கும்!

Comments Off on 4 நாட்களுக்கு மழை இன்னும் நீடிக்கும்!

சென்னை வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

Continue reading …

டீக்கடைக்காரரின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி!

Comments Off on டீக்கடைக்காரரின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி!

டீக்கடைக்காரரின் மகள் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகிறார். டீக்கடைக்காரரின் மகள் பவானியா என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் குரூப் 1 தேர்வு எழுதினார். இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமலேயே தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக […]

Continue reading …

மதுரையில் மருந்துக்கடைக்கு சீல்!

Comments Off on மதுரையில் மருந்துக்கடைக்கு சீல்!
மதுரையில் மருந்துக்கடைக்கு சீல்!

மதுரையில் மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் காமராஜர் சாலையிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை மருந்து கடை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது மருத்துவர் பரிந்துரை சீட்டில்லாமல் மாணவர்களுக்கு மாத்திரை வினியோகம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருந்துக்கடை உரிமையாளர் தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு […]

Continue reading …

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்!

Comments Off on வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்!

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகம் சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிஎஸ்கே அணியில் முன்னாள் வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா என்பதும், அவர் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவம் செய்துள்ளது. […]

Continue reading …

கார் மீது பேருந்து மோதி விபத்து!

Comments Off on கார் மீது பேருந்து மோதி விபத்து!

தனியார் பேருந்து மற்றும் கார் திருப்பூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொடுவாய் அருகேயுள்ள காக்கா பள்ளத்திலிருந்து திருப்பூர் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் எதிர்ப்புறம் ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]

Continue reading …

அறுவை சிகிச்சையில் கத்தரிக்கோல்; இழப்பீடுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Comments Off on அறுவை சிகிச்சையில் கத்தரிக்கோல்; இழப்பீடுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கத்தரிக்கோலை பிரசவம் முடிந்து வயிற்றில் வைத்து தைத்த டாக்டர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு அறுவை சிசிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது. அப்போது போடப்பட்ட தையலின் போது வயிற்றுக்குள்ளேயே கத்திரிக்கோலை வைத்து தைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில […]

Continue reading …

காவிரியில் நீர்வரப்பு அதிகரிப்பு!

Comments Off on காவிரியில் நீர்வரப்பு அதிகரிப்பு!

காவிரியில் நீர்வரப்பு அதிகரித்துள்ளதால் கரையோரமிருக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரியில் நீர்வரப்பு 2.40 லட்சம் கனஅடியாக வர வாய்ப்புள்ளது. கர்நாடக பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளம் கரைபுண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிப்பவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவிரியில் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வர வாய்ப்பிருப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து காவிரி கரையோரம் […]

Continue reading …

சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Comments Off on சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு!

நீதிபதிகள் பற்றி சர்ச்சைக்குரிய பேட்டி அளித்ததால் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் யூடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் […]

Continue reading …

மீண்டும் மாணவி தற்கொலை

Comments Off on மீண்டும் மாணவி தற்கொலை

மீண்டும் ஒரு பள்ளி மாணவி தமிழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இன்று பள்ளிப்பட்டு தாலுக்கா ராமா நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கங்கோத்ரி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளிப்பட்டு தாலுக்காவின் ராமா நாயுடு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தாமு. இவரது மனைவி ராகராஜேஸ்வரி. இவர் கொரோனாவால் கடந்தாண்டு உயிரிழந்தார். […]

Continue reading …

இனி தண்டோரா போட தேவையில்லை!

Comments Off on இனி தண்டோரா போட தேவையில்லை!

தலைமை செயலர் இறையன்பு இனு தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்டோரா அறிவித்தல் முறை தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு காலமாக தமிழகத்தில் ஊராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பல்வேறு அரசு அறிவிப்புகள், ஏலம், வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவற்றை தண்டோரா மூலமாக தெருத் தெருவாக அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய தமிழக தலைமை செயலர் இறையன்பு, தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்ட நிலையில் இனியும் தண்டோரா போடுவது […]

Continue reading …