Home » Archives by category » தமிழகம் (Page 248)

12ம் வகுப்பு மாணவி தற்கொலை!

Comments Off on 12ம் வகுப்பு மாணவி தற்கொலை!

12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது மற்றொரு 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் இன்று 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அப்பள்ளிக்கு உடனடியாக கல்வி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைந்து சென்று மாணவி தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க […]

Continue reading …

கிணற்றில் இளைஞர்களின் சடலம்!

Comments Off on கிணற்றில் இளைஞர்களின் சடலம்!

கிணற்றில் அழுகில் நிலையில் 2 இளைஞர்களின் சடலங்கள் திருச்செங்கோடு அருகே விவசாய கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லசமுத்திரம் பாலமேட்டு என்ற இடத்தில் சடலமாகக் கிடந்த 2 பேரும் யார், அவர்கள் எப்படி இறந்தனர்? இது கொலையா? தற்கொலையா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Continue reading …

ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை!

Comments Off on ஈஷா மையத்தில் இளைஞர் தற்கொலை!

இளைஞர் ஒருவர் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புகழ்பெற்ற ஈஷா யோகா மையம் கோயம்புத்தூரில் பிரம்மாண்ட சிலையுடன் உள்ளது. இங்கே ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சிவராத்திரியன்று இங்கே மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வருகை தருவார்கள். இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ரமணா என்ற 28 […]

Continue reading …

கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட விடுதி!

Comments Off on கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட விடுதி!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி திடீரென மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவியின் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி பள்ளி குறித்து விசாரணை செய்தபோது பள்ளியில் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் அதில் 24 மாணவிகளை தங்க வைத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் முறையிடுவோம் என மாநில குழந்தைகள் நல ஆணையர் […]

Continue reading …

ஆடிகிருத்திகைக்கு சிறப்பு ரயில்!

Comments Off on ஆடிகிருத்திகைக்கு சிறப்பு ரயில்!

தெற்கு ரயில்வே ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆடிக்கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களின் வசதியை முன்னிட்டு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை முதல் ஜூலை 25ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. பயணிகள் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 43407/43418) அரக்கோணத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் […]

Continue reading …

சிலைகள் கடத்த முயற்சி!

Comments Off on சிலைகள் கடத்த முயற்சி!

பல கோடி மதிப்புள்ள சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அச்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கும்பகோணத்தில் ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் என்ற கடையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு அச்சிலைகள் வெளிநாட்டிற்கு ஆவணமின்றி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. ஸ்ரீதர்ஷன் ஆர்ட் மெட்டல் கடையில் சிலை தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]

Continue reading …

மதிப்பெண் கூட்டலில் குளறுபடி!

Comments Off on மதிப்பெண் கூட்டலில் குளறுபடி!

தமிழகத்தில் நடைபெற்ற +2 தேர்வின் மதிப்பெண் கூட்டலில் தவறு செய்ததாக ஆசிரியர்கள் தேர்வு துணை இயக்குனரிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர். அந்த ஆசிரியர்கள் உடனடியாக தேர்வு துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 85 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மதிப்பெண் கூட்டலில் ஏற்பட்ட தவறு காரணமாக ஐம்பத்தி ஐந்து மதிப்பெண் என்றும், 76 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெறும் ஆறு மதிப்பெண்கள் என்றும் ஆசிரியர்கள் தவறாக பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் […]

Continue reading …

அடுத்த 3 நாட்களுக்கு மழை!

Comments Off on அடுத்த 3 நாட்களுக்கு மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், கோவை, திருப்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கலில் இன்று கனமழைக்கு […]

Continue reading …

விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Comments Off on விஜயபாஸ்கர் மீது வழக்கு!

தமிழக அரசுக்கு குட்கா ஊழல் தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் உட்பட 12 பேரை விசாரிக்க சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு தொடரப்பட்டு பல திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்ந்தது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. […]

Continue reading …

வருமான வரித்துறை சோதனை!

Comments Off on வருமான வரித்துறை சோதனை!

வருமான வரித்துறை தமிழகத்தில் இன்று திடீரென்று 20 அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை செய்தனர். வருமானவரித் துறையினர் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது தமிழகத்திலுள்ள பிரபலங்களின் வீடுகளில் மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர். மதுரை, […]

Continue reading …