Home » Archives by category » தமிழகம் (Page 255)

திருமாவளவனுக்கு நெட்டிசன்களின் கேள்வி?

Comments Off on திருமாவளவனுக்கு நெட்டிசன்களின் கேள்வி?

திருமாவளவனுக்கு பாஜக வேட்பாளராக பழங்குடியின பெண் திரௌபதி முர்முவை நிறுத்தியுள்ளதால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருமாவளவன் பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்போது திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வி. முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு […]

Continue reading …

ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வருவாரா?

Comments Off on ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓபிஎஸ் வருவாரா?

ஓபிஎஸ். ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தை போராட்டக் களமாக மாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்கதையாக மாறி உள்ளது. அதிமுக கட்சியிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வருகிறது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. நாளை நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்நியலையில் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு […]

Continue reading …

ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அபராதம் வசூல்!

Comments Off on ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அபராதம் வசூல்!

ஒரே நாளில் ஒரு ரயிலில் மட்டுமே டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பீகாரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சாகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் பயணித்தவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பலரும் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிய […]

Continue reading …

ஆன்லைன் சூதாட்டத்தால் பலியாகும் உயிர்கள்!

Comments Off on ஆன்லைன் சூதாட்டத்தால் பலியாகும் உயிர்கள்!

ஆன்லைன் சூதாட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் 24வது தற்கொலை நடந்தேறி உள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்துள்ள தற்கொலைகள் குறித்து பேசும்போது, “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் […]

Continue reading …

எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எச்சரிக்கை!

Comments Off on எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எச்சரிக்கை!

எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக கட்சி ஒற்றை தலைமை ஏற்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் கட்சி இரண்டாக உடையும் நிலைமை எழுந்துள்ளதாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி […]

Continue reading …

தேர்வு முடிவுகள் எப்போது?

Comments Off on தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தேர்வு முடிவுகளின் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை நாளை (ஜூன் 17)ம் தேதியும், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதியும் வெளியாகுமென அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வு […]

Continue reading …

பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

Comments Off on பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்வதுதான் ஆயுதமாகும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க […]

Continue reading …

நண்பர்களுக்குள் கத்தி குத்து!

Comments Off on நண்பர்களுக்குள் கத்தி குத்து!

நண்பர்கள் இணைந்து பப்ஜி விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் கத்தி குத்து சம்பவம் நடந்தேறி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார் அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

Continue reading …

வங்கியில் வேலைவாய்ப்பு!

Comments Off on வங்கியில் வேலைவாய்ப்பு!

ஐடிபிஐ வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பிப்பதற்கான கட்டணம் மற்றும் ஏனைய தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100, எஸ், எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் நடக்கும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்பு மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு எழுத செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பம் அனுப்ப ஜூன் 17ம் தேதி கடைசி நாளாகும்.

Continue reading …

ஈரோட்டில் அதிர்ச்சி!

Comments Off on ஈரோட்டில் அதிர்ச்சி!

ஈரோட்டில் திடீரென வானத்தில் கேட்ட பயங்கர வெடி சத்தமும், அதை தொடர்ந்து புகை மூட்டமும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை ஈரோடு மாவட்டம், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பயங்கரமான வெடிசத்தம் கேட்டுள்ளது. வெடிசத்தத்தை கேட்ட அடுத்த சில மணித்துளிகளிலேயே வீட்டின் கூரைகள் வேகமாக அதிரத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் பதறிய வண்ணம் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் வானில் வட்ட வடிவிலான புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளது. […]

Continue reading …