ஈரோட்டில் அதிர்ச்சி!

Filed under: தமிழகம் |

ஈரோட்டில் திடீரென வானத்தில் கேட்ட பயங்கர வெடி சத்தமும், அதை தொடர்ந்து புகை மூட்டமும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஈரோடு மாவட்டம், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பயங்கரமான வெடிசத்தம் கேட்டுள்ளது. வெடிசத்தத்தை கேட்ட அடுத்த சில மணித்துளிகளிலேயே வீட்டின் கூரைகள் வேகமாக அதிரத் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் பதறிய வண்ணம் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். மேலும் வானில் வட்ட வடிவிலான புகை மூட்டமும் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை வானத்தில் பயங்கர வெடி சத்தத்துடன் புகையும் தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வழியாக சூப்பர்சோனிக் ரக விமானம் பறந்ததினால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.