Home » Archives by category » தமிழகம் (Page 263)

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

Comments Off on முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த மே 14ம் தேதி திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 23) மற்றும் இளையார்குளத்தை சேர்ந்த செல்வன் (வயது 25) ஆகிய […]

Continue reading …

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கால நேரம் அறிவிப்பு!

Comments Off on டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கால நேரம் அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கால நேரம் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வுக்கு காலை 9 மணிக்கு மேல் தேர்வு எழுத அனுமதி கிடையாது என டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கு 9 மணிக்குள் தான் தேர்வு எழுதுபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுதுபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இந்த தேர்வை எழுத 11.78 லட்சம் […]

Continue reading …

இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கிய பருவமழை!

Comments Off on இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கிய பருவமழை!

இந்த வருடத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளதால் கூடுதல் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி கடந்த 15ம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள பகுதிகளில் 5 நாட்களுக்கு […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நூலின் விலை உயர்வின் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் கடிதம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர் கதையாகவே உள்ளது. இதனை தொடர்ந்து பல பொருட்களும் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பின்னலாடைகளுக்கான நூலின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பின்னலாடைக்கான நூலின் விலையை குறைக்க கோரி பின்னலாடை […]

Continue reading …

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

Comments Off on சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த அரை மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது 3 […]

Continue reading …

லாட்டரியால் தொடரும் வேதனை!

Comments Off on லாட்டரியால் தொடரும் வேதனை!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் லாட்டரியை ஒழித்து 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அதன் வேதனை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுபற்றி கூறும் போது, “ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த செய்தி வேதனையளிக்கிறது. இதுகுறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்! தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பிறகும் லாட்டரி […]

Continue reading …

விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் பட்டியல் ரெடி!

Comments Off on விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் பட்டியல் ரெடி!

விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அனுபவ அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உட்பட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.

Continue reading …

133 கிலோ இறைச்சி பறிமுதல்!

Comments Off on 133 கிலோ இறைச்சி பறிமுதல்!

உணவுப் பாதுகாப்பு அலுவலர் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் 113 ஓட்டல்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8கிலோ கெட்டுப்போன சிக்கன், ஆட்டுக்கறி, மீன், நண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.34,650 ஆகும். சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

Continue reading …

நட்டி நட்ராஜ் டுவிட்டரில் மகிழ்ச்சி பதிவு!

Comments Off on நட்டி நட்ராஜ் டுவிட்டரில் மகிழ்ச்சி பதிவு!

நடிகர் நடராஜன் இலங்கையில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் அதைப்பற்றிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். மேலும் பல அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களை டுவிட்டரில் பதிவிட்டு வரும் தமிழ்நாட்டு மக்கள் பலர் ஈழ போரில் ராஜபக்சே குடும்பம் இழைத்த அநியாயத்திற்கு கிடைத்த கூலி இது என்ற வகையில் […]

Continue reading …

தமிழக அரசு அரிசி கொள்முதல் செய்ய தடையில்லை!

Comments Off on தமிழக அரசு அரிசி கொள்முதல் செய்ய தடையில்லை!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இலங்கை மக்களுக்காக அரிசி கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக அரிசி கொள்முதல் செய்வதை தடை செய்யக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்து அனுப்ப உள்ளதாக முதலமைச்சர் […]

Continue reading …