சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த அரை மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் தற்போது 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவித்துள்ளது.