
உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என அதன் தலைவர் வேல்முருகன் அறிக்கை. உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் 40 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பல திட்டங்கள் அறிவித்து வருகின்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடியில் 40 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ஊஞ்சப்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகையில் நடைபெற்ற சப்பரத் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் அறிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் நடந்த சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாகை மாவட்டம் உத்திராபதீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி தீபராஜன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரின் குடும்பத்திற்கு ரூ. 5 […]
Continue reading …
மே மாதம் தொடர்ந்து பண்டிகை தினங்கள் வருவதையொட்டி தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை இவை இரண்டையும் கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இடையில் மே 2ம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் […]
Continue reading …
தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் […]
Continue reading …
கடுமையான அனல் காற்று வரும் ஐந்து நாட்களுக்கு வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. மக்கள் இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி தமிழகத்தில் நேற்று எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் தாக்கம் இருந்ததாக தெரிகிறது. அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருச்சியில் 104 டிகிரியும், கரூரில் 103 டிகிரியும் வெயில் கொளுத்தியது. மே மாதம் நான்காம் தேதி அக்னி […]
Continue reading …
மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தேரோட்டம் என்பதால் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு வழங்க ஆய்வு செய்து வருகின்றனர். மிகவும் பிரசித்திப் பெற்றது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். இக்கோயிலில் நாளை தேர்த் திருவிழா நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர் செல்லும் பாதைகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் […]
Continue reading …
2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக காவல்துறை ஆப்பரேஷன் வேட்டை 2.0 என்ற வேட்டையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது. இதில் போதை பொருளான கஞ்சா மொத்த வியாபாரிகள் மற்றும் சில வியாபாரிகள் பிடிபட்டனர். ஒரே மாதத்தில் இந்த வேட்டையில் 2,423 வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடமிருந்து சுமார் 3600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் கஞ்சா வியாபாரிகளின் 10 வங்கி […]
Continue reading …
தக்காளி விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வெளிவந்த தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 80 லாரிகளில் தக்காளி வரும். ஆனால் தற்போது 40 லாரிகளில் […]
Continue reading …
வருகின்ற ஜூன் 26-ம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “ஒரு சில காரணங்களால் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது, மேலும் ஜூன் 26ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த தேர்வு ஜூலை 2ம் தேதி நடத்தப்படும்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே […]
Continue reading …