தமிழக அரசு தொடர்ந்து 4 நாட்கள் விடுதுறை அறிவிப்பு

Filed under: தமிழகம் |

மே மாதம் தொடர்ந்து பண்டிகை தினங்கள் வருவதையொட்டி தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆம். மே 1ம் தேதி உழைப்பாளர் தினம், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை இவை இரண்டையும் கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இடையில் மே 2ம் தேதி விடுமுறை தினமாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3ம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே 1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,” என்று எழுதியிருந்தார்.

தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. மே 1 உழைப்பாளர் தினமும், மே 3ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் மே 2ம் தேதியும் விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.